பூமி எங்கும் ஒரே பாஷை இருந்த காலத்தில் ஜனங்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சிறையாரில் குடியிருந்தார்கள். செங்கலும், நிலக்கீலும் உபயோகித்து வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி அவர்களுக்கு பேர் உண்டாக்க நினைத்தார்கள். கோபுரம் கட்டும்பொழுது தேவன் அதைப் பார்க்க இறங்கினார். அவர்களுடைய எண்ணத்தை அறிந்த கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து சிதறிப்போகப் பண்ணினார். அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினபடியால் அதன் பெயர் பாபேல் எனப்பட்டது – ஆதி 11:1-9