1. பலியைப் பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் – 1சாமு 15:22
2. விலங்குகளின் சர்வாங்க தகனபலிகளை விட வாழ்வு முழுவதுமான கீழ்படிதலையே தேவன் விரும்புகிறார் – சங் 40:6 – 8
3. பலியை அல்ல நொறுங்குண்ட இருதயத்தையே தேவன் விரும்புகிறார் – சங் 51:17
4. பலிகளை அல்ல கீழ்படிதலை தேவன் விரும்புகிறார். அப்போது அவர் தேவனாக இருந்து நம்மை அவரது பிள்ளைகளாக அங்கீகரிப்பதாக வாக்கருளுகிறார் – எரே 7:21 – 23
5. பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளை விட தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறார் – ஓசி 6:6
6. மாய்மாலத்தையும், சடங்காச்சாரத்தையும் கர்த்தர் வெறுக்கிறார். நீதி தண்ணீரைப் போல புரண்டு வர விரும்புகிறார் – ஆமோ 5:21 – 24
7. பலிகளில் கர்த்தர் திருப்தியாக மாட்டார். நன்மை, நியாயம், இரக்கம் ஆகியவை பூண்டு தாழ்மையுடன் நடப்பதையே விரும்புகிறார் – மீகா 6:6 – 8
8. பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று இயேசு கூறுகிறார் – மத் 9:13