Menu Close

நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தின் விளக்கம்

சொப்பனத்தில் பார்த்த பொன்னாலான தலை பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார். அவனது மரணத்திற்குப் பின் அந்த சாம்ராஜ்ஜியம் சிதறத் தொடங்கி விட்டது. அவருக்குப் பின் தோன்றும் கீழ்த்தரமான ராஜ்ஜியத்தை வெள்ளியாலாகிய மார்பும், புயமும் குறிக்கிறது. இந்த ராஜ்ஜியம் கோரேஸ் என்பவனால் ஸ்தாபிக்கப்படும் மேதிய பெர்சிய சாம்ராஜ்ஜியம். வெண்கல வயிறும், தொடையும் மகா அலெக்சாண்டரால் மூன்றாவதாக ஸ்தாபிக்கப்படும் கிரேக்க ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. இரும்பும், களிமண்ணுமான பாதங்கள் ரோமராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. ரோமசாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்த பின் பல நாடுகள் ஒன்று சேர்ந்து அங்கு அரசாண்டன. அவற்றில் சில ராஜ்ஜியங்கள் பலமுள்ளவைகளாயிருந்து நீண்ட காலம் இருந்தன. சில பலமற்றவைகளாய் நொறுங்கிப் போயின.
உருண்டு வந்த அந்த கல் ஒரு ராஜ்ஜியமாகி பூமி முழுவதையும் நிரப்பிற்று. இந்த ஐந்தாவது ராஜ்ஜியமானது மேசியாவாகிய இயேசுவால் ஸ்தாபிக்கப்படும் ராஜ்ஜியமாகும். அது பூமி முழுவதையும் நிரப்பி புதிய வானம், புதிய பூமியிலும் ஊடுருவும். இந்த விளக்கத்தைக் கூறினவுடன் ராஜாமுகங்குப்புற விழுந்து தானியேலை வணங்கினான் – தானி 2:37 – 44

Related Posts