Menu Close

நெகேமியாவின் பண்புகள்

1. கர்த்தருடைய மக்கள், கர்த்தருடைய நகரம், கர்த்தருடைய பணி ஆகியவற்றில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தனர்.
2. கர்த்தருடைய நகரத்தின் அவலநிலையை அறிந்து மிகவும் வேதனைப்பட்டார்.
3. உபவாசித்து ஜெபித்து சிறந்த ஜெபவீரராக திகழ்ந்தார்.
4. தான் போகிற வேலைக்குத் தேவையானவற்றை அரசரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
5. திட்டத்தைச் செயல்படுத்த தானே ஆய்வு மேற்கொண்டு விபரங்களை நேரில் கண்டறிந்தார்.
6. பிறர் ஏளனம் செய்வதைக் கருத்தில் கொள்ளாமல் பணி செய்தார்.
7. ஏழைகளுக்கு இரங்கி அநியாய வட்டி வாங்கியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்தார்.
8. தனக்கு ஆதாயம் தேடாமல் மக்களுக்காகத் தானே செலவு செய்தார்.
9. தனது பதவிக்கேற்ற ஊதியத்தையும் விட்டுக் கொடுத்தார்.
10. சதித் திட்டங்களை அறிந்திருந்தார்.
11. தீமையோடு சமரசம் செய்வதைத் தடுத்தார்.
12. மக்கள் வேதத்தைக் கற்றுக்கொள்ள எஸ்றாவுடன் சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்தார்.
13. உயிர் பிழைப்பதற்கு ஒளிந்து கொள்ள மறுத்தார்.
14. மக்கள் தேவனிடம் உண்மையாக இருப்பதற்காக உடன்படிக்கை பண்ணச் செய்து ஆலயத்தின் காரியங்களைத் திட்டம் பண்ணினார்.
15. மக்கள் பரிசுத்தமாக வாழ அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டதிலிருந்து மாற்றினார்.
16. அலங்கத்தைக்கட்டி முடித்து அதைப் பிரதிஷ்டை பண்ணினார்.

Related Posts