இப்பொழுது இருக்கிற வானமும், பூமியும், சமுத்திரங்களும் அழிந்து, புதியவானமும், புதிய பூமியும் தோன்றும். தேவன் மனுஷர்கள் மத்தியில் வசித்து, தேவன் தாமே அவர்களுக்கு தேவனாயிருப்பார். அல்பாவும், ஓமெகாவும், ஆதியும், அந்தமும், முந்தினவரும், பிந்தினவருமானவர். ஜனங்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார். அங்கே மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை. முந்தினவைகள் ஒழிந்து போயின. தேவனே அவர்களுக்குப் வெளிச்சமாயிருப்பார். வானங்கள் மடமடவென்று அகன்று, பூதங்கள் வெந்து உருகி, பூமியும் அதிலுள்ள கிரியைகளும் அழிந்து போம். புதிய வானத்தில் தேவன் நித்திய காலமாய் ஆளுகை செய்வார்.
கர்த்தர்