சீரிய படைத்தலைவனான நாகமோன் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டபோது அவன் வீட்டு வேலைக்காரி கூறியதால் எலிசாவிடம் வந்தான். எலிசா அவனிடம் “யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு. அப்பொழுது உன் மாம்சம் மாறி சுத்தமாவாய்” என்றார். நாகமோனோ “தன் கையினால் அந்த இடத்தைத் தடவி குணமாக்குவான் என்று நினைத்தேன். இஸ்ரவேலின் தண்ணீரைவிட தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும், பர்பாரும் நல்லதல்லவா” என்று சொல்லி திரும்பிப் போனான். அவனுடைய ஊழியக்காரர்கள் அவனிடத்தில் எடுத்துச் சொன்னபோது எலிசா சொன்னபடி செய்தான். குஷ்டம் நீங்கிற்று – 2இரா 5:1 – 19