1. பூரண அன்பு: 1யோ 4:18 “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்; ….பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் அல்ல.”
2. பூரண அறிவு: கொலோ 3:10 “தன்னை சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக் கிறீர்களே.”
3. பூரண சற்குணம்: கொலோ 3:14 “பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்.”
4. பூரண நிச்சயம்: எபி 10:22 “துர்மனசாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ள வர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.”
5. பூரண நம்பிக்கை: 1பேது 1:13 “இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.”
6. பூரண கிருபை: அப் 4:33 “கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள்; அவர்களெல்லார் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.”
7. பூரண கிரியை: யாக் 1:4 “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.”