1. ஆபிரகாம் இஸ்மவேலுக்காக பண்ணிய விண்ணப்பத்தைக் கேட்டார்: ஆதி 17:20 “இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் 12 பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.”
2. சாலமோனின் ஆலயப்பிரதிஷ்டையில் பண்ணிய விண்ணப்பத்தைக் கேட்டார்: 1இரா 9:3 “கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமூகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டிய இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.”
3. எசேக்கியேல் தன் உயிருக்காகப் பண்ணிய விண்ணப்பத்தைக் கேட்டார்: 2இரா 20:5 “கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.”
4. சகரியா தனக்கு ஒரு பிள்ளைக்காக ஜெபித்த விண்ணப்பத்தைக் கேட்டார்: லூக் 1:13 “தூதன் அவனை நோக்கி: சகரியாவே பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.”
5. கொர்நெலியுவின் விண்ணப்பத்தைக் கேட்டார்: அப் 10:31 “கொர்நெலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதர்மங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.”