Menu Close

தேவனோடு மோசேக்கு இருந்த நேரடிதொடர்பு

• மோசேக்கு தேவனோடு சில நேரடி அனுபவங்கள் இருந்தன. மோசே தேவனுடைய பர்வதமாகிய ஒரேப் மலைக்கு வந்த போது தேவனுடைய தூதன் முட்செடியின் மத்தியில் தோன்றி கூப்பிட்டு தான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனென்று கூறினார். தமது மக்கள் எகிப்தில் படும் துன்பங்களைக் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து விடுதலையாக்கி பாலும் தேனும் ஓடுகிற கானானுக்கு அழைத்துக் கொண்டு செல்ல இறங்கி வந்திருப்பதாகவும் கூறினார் – யாத் 3:1-10
• தேவன் மோசேயை சீனாய் மலையின் உச்சியில் அடர்ந்த கார்மேகத்தில் எக்காளச் சத்தத்தோடும், மின்னல் இடி முழக்கத்தோடும் சகல ஜனங்களும் காணும்படி சந்தித்தார். தேவன் அக்கினிமயமாய் இறங்கினபடியால், பெருஞ்சூளையிலிருந்து புறப்படும் புகையைப்போன்று, புகை மலையிலிருந்து கிளம்பிற்று. பர்வதம் அதிர்ந்தது. யாத் 24:16 – 18 கர்த்தருடைய மகிமை சீனாய் மலையின் மேல் நிலைத்திருந்தது என்றும், மேகம் அதை ஆறுநாள் மூடியிருந்தது என்றும் வேதத்தில் பார்க்கிறோம்.
• கர்த்தருடைய மகிமையானது பார்ப்பதற்கு பட்சிக்கிற அக்கினி போலிருந்தது. மோசே மேகத்தின் நடுவே நுழைந்து அங்கேயே அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாட்கள் இருந்தார். சிலகாலம் மோசே தேவனுடைய சமூகத்தில் இருந்தபடியால் மோசேயின் முகத்தை திரையிட்டு மறைக்கும் அளவிற்கு அது ஒளி படைத்ததாயிற்று. இந்த நேரடித்தொடர்பில் தேவன் மோசேயோடு நீண்டநேரம் உரையாடினார். மற்றும் அவன் நிறைவேற்றும்படியான திட்டங்களையும் கொடுத்தார்.

Related Posts