Menu Close

தேவனுடைய பெட்டியும், இயேசுவும்

1. பெட்டி மரத்தால் செய்யப்பட்டு பொன் தகட்டால் மூடப்பட்டது, கிறிஸ்துவின் மனிதத் தன்மையையும், தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது.
2. பெட்டி மகாபரிசுத்த ஸ்தலத்திலிருந்த ஒரே பொருள். ஆராதனையின் பொருளும், தேவ சமூகத்தில் நமக்காக இருப்பவரும் கிறிஸ்துவே.
3. கிருபாசனத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்துவார். கிறிஸ்துவே தேவனை நமக்கு வெளிப்படுத்தியவர் – யோ 1:18
4. பெட்டியிலிருந்த பொற்பாத்திர மன்னா ஜீவ அப்பமாகிய கிறிஸ்துவைக் காட்டும் – யோ 6:32-35
5. துளிர்த்த கோல் உயிர்த்த இயேசுவைக் காட்டும்.
6. கற்பலகைகள் கிறிஸ்துவைக் காட்டும். நியாயப்பிரமாணத்தை உள்ளத்தில் கொண்டவராக கிறிஸ்து வந்து அதை முற்றிலும் நிறைவேற்றினார்.
7. கிருபாசனமாக கிருபையும், சத்தியமும் பூண்டு கிறிஸ்து நம்மிடம் வந்தார் – யோ 1:17
8. பெட்டி இஸ்ரவேலருடன் சஞ்சரித்த நிலை கிறிஸ்து சபையின் வனாந்தர வாழ்வில் உடன் சஞ்சரிப்பதைக் காட்டும் – மத் 28:18-20

Related Posts