இஸ்ரவேலரை சபிக்க பிலேயாமை அழைத்து வரும்படி மோவாபின் ராஜாவாகிய பாலாக் தன்னுடைய மூப்பர்களை அனுப்பினான். தேவன் பாலாக்கிடம், எண் 22:12 “நீ அவர்களோடே போக வேண்டாம்; அவர்களை சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.” மீண்டும் பாலாக்கின் ஊழியர்கள் வந்த போது பிலேயாமின் வார்த்தையிலிலுள்ள மாற்றத்தைப் பாருங்கள்.
• எண் 22:18, 19 “பாலாக் எனக்குத் தன் வீடுநிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும் பொருட்டு, என் தேவனாகிய கட்டளையை நான் மீறக்கூடாது.”
• “ஆகிலும் கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு, நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.” அதன்பின் புறப்பட்டுப் போனான். தேவசித்தத்திற்கு விரோதமாக செயல்பட பிலேயாம் தீர்மானித்ததற்கு காரணம் பாலாக் கொடுப்பதாகச் சொன்ன பொன், வெள்ளி பொருட்களும், கனப்படுத்துவேன் என்று சொன்ன வாக்குத்தத்தமுமாகும். “ஆனாலும்” “இனிமேல்” என்ற வார்த்தைகளே தேவசித்தத்திற்கு விரோதமாக செயல்பட்டதன் அடையாளமாகும். கர்த்தர் ஒருமுறை சொன்னால் அதனைத் திரும்பவும் மாற்றி அமைப்பதில்லை. வெளிப்படுத்தப்பட்ட தேவசித்தத்திற்கு விரோதமாகப் போன பிலேயாம் கொலை செய்யப்பட்டான்.