1. தாவீது இளமையிலிருந்தே தனக்கு நடக்கிற ஒவ்வொரு காரியங்களும் கர்த்தர் தான் நடக்க வைக்கிறார் என்று விசுவாசித்தான் – 1சாமு 24 – 27 அதிகாரங்கள்
2. தாவீது தான் செய்கிற காரியங்களை கர்த்தரிடத்தில் கேட்டுத் தான் செய்தான். பெலிஸ்தியரை முறியடிக்கப் போகலாமா எனக் கர்த்தரிடம் கேட்டான் – 1சாமு 23:2 கர்த்தர் போ என்றார் – 1சாமு 23:4
சிக்லாக்கை முறியடிக்கப் போகலாமா எனக் கர்த்தரிடம் கேட்டான். கர்த்தர் போ என்றார் – 1சாமு 30:8
தாவீது யூதாவின் பட்டணங்களில் ஒன்றில் இருக்கலாமா என்று கர்த்தரிடம் கேட்டு கர்த்தர் எபிரோனுக்குப் போ என்றார் – 2சாமு 2:1
தாவீது பெலிஸ்தியருக்கு விரோதமாக போகலாமா எனக் கர்த்தரிடம் கேட்டபோது கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என வாக்குக் கொடுத்தார் – 2 சாமு5 :19
எப்படி போகவேண்டும் என்று ஆலோசனையளித்தார் – 2சாமு 5:23
3. தாவீது தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்மாவோடும் தேவனைத் தொழுது கொண்டான். இஸ்ரவேலர் அனைவரும் அப்படியே செய்ய வேண்டும் என்றும் போதித்தான் – 1நாளா 15, 16அதிகாரங்கள்
4. “எனக்குச் சித்தமானவைகளை எல்லாம் செய்வான்” என்று தேவனிடமிருந்து சாட்சி பெற்றான் – அப் 13:22
5. கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் ராஜாவாக திடப்படுத்தி தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் நிமித்தம் தன்னுடைய ராஜ்ஜியத்தை உயர்த்தினார் என்று தாவீது உணர்ந்தான் – 2சாமு 5:12