1. தாவீது பொய் சொன்னான்: தாவீது ஆசாரியனாகிய அகிமலேக்கினிடத்தில் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொய் சொன்னான் – 1சாமு 21:1, 2
2. தேவனற்ற புறஜாதியரான பெலிஸ்தியரிடத்தில் அடைக்கலம் தேடினான்: காத்தின் ராஜாவாகிய ஆகிசிடத்தில் தாவீது உயிருக்குப் பயந்து பித்தங் கொண்டவன் போல் நடித்து அடைக்கலம் தேடிப்போனான் – 1சாமு 21:10 –15
3. ஆசாரியர்களும், இன்னும் பலரும் மரணமடைய மறைமுகமாக காரணமாயிருந்தான்: கர்த்தருடைய ஊழியக்காரரான 85 ஆசாரியர்களையும், மற்றும் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும், குழந்தைகளுமான அனைவரும் தோலேக்கினால் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். இதற்கு தாவீது தான் மறைமுகமான காரணமாயிருந்தான் – 1சாமு 22:11 – 23