Menu Close

தானியேல் கண்ட நான்கு மிருகங்களின் தரிசனம்

• இது வருங்கால நான்கு ராஜ்ஜியங்களைக் குறித்த தரிசனமாகும். சிங்கம் பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. அதன் இறகுகள் பிடுங்கப்பட்ட நிலை நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது.
• ஒருபக்கமாய் சாய்ந்து நின்ற கரடி மேதிய, பெர்சிய ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. அந்த ராஜ்ஜியத்தில் மேதியர்களைவிட பெர்சியர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தது. அம்மிருகத்தின் வாயிலிருந்த மூன்று விலா எலும்புகள் அவர்கள் பிடித்த பாபிலோன், லீதியா, எகிப்து ஆகிய நாடுகளைக் குறிக்கும்.
• நான்கு செட்டைகளையுடைய சிவிங்கி பெலமுள்ளதும், வேகமாக ஓடக் கூடியதுமாகும். இது மகாஅலெக்சாண்டரின் ராஜ்ஜியத்தையும் அவனது வெற்றிகளையும் குறிக்கிறது. அந்த நான்கு தலைகளும், அவன் மரித்தபின் அவனது சாம்ராஜ்ஜியத்திலிருந்து உருவான நான்கு ராஜ்ஜியங்களாகும்.
• இரும்புப் பற்களைக் கொண்ட பயங்கரமும், பலத்ததுமான நான்காம் மிருகம் ரோம சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. இதற்கு பத்து கொம்புகள் இருந்தன. அவைகளுக்கிடையில் ஒரு சின்ன கொம்பு எழும்பிற்று. இந்த சிறிய கொம்பு உலகில் ஆளுபவனைக் குறிக்கிறது. அவனே அந்திகிறிஸ்து. அந்த ராஜ்ஜியத்தில் எழும்பும் பத்து ராஜாக்களில் மூவரை கீழே தள்ளி, தேவமக்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணி அவர்களை மேற்கொள்ளுவான். அவன் தேவனுக்கு விரோதமாக பேசுவான். நீண்ட ஆயுசுள்ளவர் அதாவது இயேசு வரும்போது பரிசுத்தவான்கள் ராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள். அந்திகிறிஸ்து அழிக்கப்பட்டு எரிகிற அக்கினிக் கடலிலே போடப்படுவான் – தானி 7:1 – 28

Related Posts