1. நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாய் ஜீவன் ஓடுகிறது – யோபு 7:6
2. ஜீவன் காற்றைப் போலவும், மேகத்தைப் போலவும் பறந்து போகிறது – யோபு 7:7 – 9
3. ஜீவன் சாய்ந்து போகிற நிழலைப் போல் இருக்கிறது – யோபு 8:9
4. ஜீவன் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப் போல கடந்து போகிறது – யோபு 9:26
5. ஜீவன் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாய் இருக்கிறது – யோபு 9:25
6. ஜீவன் இரையின்மேல் பாய்கிற கழுகைப்போல் கடந்து போகிறது – யோபு 9:26
7. ஜீவன் நாலு விரற்கடையாயிருக்கிறது – சங் 39:5
8. ஜீவன் மாயையிலும் லேசாயிருக்கிறது – சங் 62:9, 49:10 – 13
9. ஜீவன் சொப்பனத்தைப் போல் ஒழிகிறது – சங் 73:20
10. ஜீவன் நிலையற்றது – சங் 89:47
11. ஜீவன் நித்திரைக்கு ஒத்திருக்கிறது – சங் 90:5
12. ஜீவன் ஒரு கதையைப்போல் கழிந்து போகிறது – சங் 90:9
13. ஜீவன் வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகப்படுகிறது – சங் 90:5
14. ஜீவன் காலையில் பூத்து மாலையில் உலர்ந்து போகிற பூவைப்போல இருக்கிறது – சங் 90:6
15. ஜீவன் மேய்ப்பருடைய கூடாரத்தைப்போல பெயர்ந்து போகிறது – ஏசா 38:12
16. ஜீவன் பாவிலிருந்து நூல் அறுக்கப்படுவது போன்றது – ஏசா 38:12
17. ஜீவன் சூனியமாகவும், மாயையைப்போலவும் இருக்கிறது – ஏசா 40:17
18. ஜீவன் சேர்க்கக் கூடாதபடி தரையிலே சுவறுகிற தண்ணீரைப் போலிருக்கிறது – 2சாமு 14:14
19. ஜீவன் கொஞ்சகாலம் தோன்றி பின் தோன்றாமல் போகிற புகையைப் போலிருக்கிறது – யாக் 4:14
20. ஜீவன் புல்லைப்போலவும், புல்லின் பூவைபோலவும் உலர்ந்து, உதிர்ந்து போகிறது – 1பே 1:24