Menu Close

சிறைச்சாலையில் நடந்தவைகள்

1. சிறைச்சாலையில் பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் ஒரே ராத்திரியில் வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்டனர். அவர்கள் கண்ட சொப்பனம் பலித்தது – ஆதி 40:5
2. பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் இருக்கும் பொழுது நடு இரவில் துதித்துப் பாடினர். தேவன் அதற்குப் பதில் அவர்களை விடுதலை அளித்தார் – அப் 16 :23 – 25
3. பேதுரு சிறைச்சாலையில் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கும் பொழுது எந்தக் கவலையும் இல்லாமல் தேவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் தூங்கிக் கொண்டிருந்தான். அதேபோல் தேவன் சிறைச்சாலையின் இரும்புக் கதவுகள் தானாய்த் திறக்கும்படி செய்து அவனை விடுவித்தார் – அப் 12:6 – 10
4. யோவான்ஸ்நானகன் சிறையில் இருக்கும் பொழுது ஏரோதால் சிரச்சேதம் பண்ணப்பட்டான் – மாற் 6:18 – 28
5. சிம்சோன் சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு மாவரைத்தான் – நியா 16:21
6. எரேமியா சிறைக்குள் இருந்த போது தன் சொந்தக்காரனிடமிருந்து நிலத்தைக்கிரயம் வாங்கினார் – எரே 32:6 – 44
7. யோசேப்பு சிறைச்சாலையில் இருக்கும் பொழுது விசாரணைக்காரனாயிருந்தான் – ஆதி 39:21 – 23

Related Posts