Menu Close

சவுல், சாலமோனின் தொடக்கமும், முடிவும்

சவுலும் சாலமோனும் தொடக்கத்தில் ராஜாவாக ஆட்சி புரிந்தவர்கள். இவர்களின் தொடக்கம் மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் இவர்களின் முடிவு தேவனுக்கு பிரியமில்லாததாக முடிகிறது. இவர்களின் இருதயம் தேவனுக்கு முன்பாக தூய்மையாக இருக்கவில்லை. அது என்னவென்றால் “நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னை விட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான்” என்று கர்த்தர் சவுலைப் பற்றி சாமுவேலிடம் கூறினார். “சாலமோனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல, தன் தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாயிருக்கவில்லை.” என – 1இரா 11 :4 ல் கூறியிருக்கிறது.

Related Posts