▪ சங் 5:7 “நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்வேன்.”
▪ சங் 17:15 “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்;”
▪ சங் 22:6 “நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.”
▪ சங் 26:11 “நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.”
▪ சங் 27:13 “நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப் போயிருப்பேன்.”
▪ சங் 31:14 “நானோ, கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன்.”
▪ சங் 38:13 “நானோ செவிடனைப்போல கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.”
▪ சங் 52:8 “நானோ தேவனுடைய ஆலயத்திலே பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.”
▪ சங் 55:16 “நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.”
▪ சங் 59:16 “நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;”
▪ சங் 70:5 “நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.”
▪ சங் 71:14 “நானோ எப்பொழுதும் நம்பிக்கொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.”
▪ சங் 75:9 “நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.”
▪ சங் 88:13 “நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.”
▪ சங் 109:4 “நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.”
▪ சங் 119:69 “நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.”
▪ சங் 119:70 “நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.”