Menu Close

கர்த்தர் மோசேயிடம் யோசுவாவிடம் பொறுப்பை ஒப்படைக்கச் சொன்னது

• எண் 27:18-23 “கர்த்தர் மோசேயை நோக்கி ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்து கொண்டு, அவன் மேல் உன் கையை வைத்து,”
• “அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளை கொடுத்து,”
• “இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு.”
• “அவன் ஆசாரியனாகிய எலேயாசருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.”
• “மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக் கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,”
• “அவன்மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளை கொடுத்தான்.”

Related Posts