Menu Close

கர்த்தர் பிரியமாயிருக்கும் நபர்

▪ நீதிமொழிகள் 12:22 “உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்குப் பிரியம்.”
▪ நீதிமொழிகள் 11:20 “உத்தம மார்க்கத்தாரோ கர்த்தருக்குப் பிரியமானவர்கள்.”
▪ நீதிமொழிகள்  15:8 “செம்மையானவர்களின் ஜெபமோ கர்த்தருக்குப் பிரியம்.”
▪ சங்கீதம் 37:23 “நல்லமனுஷனுடைய வழியின்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.”
▪ சங்கீதம் 147:11 “கர்த்தருக்குப் பயந்து, தமது கிருபைக்குப் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.”
▪ சங்கீதம் 69:30, 31 “தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.”
“கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.”
▪ 2 கொரிந்தியர் 9:7 “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”
▪ எபிரெயர் 13:16 “நன்மை செய்யவும் தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.”
▪ 1 பேதுரு 2:5 “ஆவிக்கேற்றபலி தேவனுக்குப் பிரியம்.”
▪ கொலோசெயர் 3:20 “பிள்ளைகளே, உங்களைப் பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.”

Related Posts