கர்த்தர் எரேமியாவைக் குயவன் வீட்டுக்குப் போகும்படி ஏவப்பட்டான். அங்கு சென்ற போது குயவன் வனைந்து கொண்டிருந்த பானை அவன் நினைத்தபடி வராததால் அதை மாற்றி வேறு விதமாகச் செய்தான். இந்த உவமை நமக்கு வெளிப்படுத்துவது என்னவென்றால்,
1. நம்மைப் படைத்த தேவனால், நமக்கு ஊழியத்தைக் கொடுத்த தேவனால் நம்மைக்கொண்டு கிரியைகள் நடப்பிக்க முடியும்.
2. நாம் நம்மை தேவனிடம் ஆழமாக ஒப்புக்கொடுக்கவில்லை என்றால், நம்மை கொண்டு தேவன் செய்ய நினைத்திருந்த ஆதி நோக்கம் குறைந்துவிடும். நம்முடைய வாழ்க்கையில் தேவனது நோக்கங்களை மாற்றிக்கொள்ள தேவன் சுதந்தரம் உடையவராயிருக்கிறார்.
3. நன்மையையும், ஆசீர்வாதமும் நமக்கு இருக்கும்படி கர்த்தர் திட்டமிட்டிருக்கும் போது, நாம் அவருக்கு விரோதமாக செயல்பட்டால், அழிவுக்கு நியமிக்கப்பட்ட பானைகளாக நம்மை தேவன் உருவாக்க முடியும் – எரே 18. ஆனால் அழிவுக்கான பானைகளாக இருந்து மனந்திரும்பினால் தேவன் நம்மை கனத்துக்கும், ஆசீர்வாதத்துக்கும் ஏற்ற பாத்திரங்களாக உருவாக்கத் தொடங்குவார்.