▪ எரே 5:3 “கர்த்தாவே உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது;”
▪ நீதி 22:12 “கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்;”
▪ 2நாளா 16:9 “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது;”
▪ சங் 32:8 “உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”
▪ நீதி 15:3 “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.”
▪ நீதி 5:21 “மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் கர்த்தர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.”
▪ ஆதி 6:8 “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.”
▪ சங் 34:15 “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது;”
▪ சங் 11:4 “கர்த்தருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது;”
▪ சக 4:10 “பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையிலிருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.”