1. ஒன்று செய்: பிலி 3:13, 14 “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரமஅழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”
2. இரண்டையும் விட்டு விடாதே: நீதி 3:3 “கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக;”
3. மூன்றில் நிலைத்திரு: 1கொரி 13:13 “விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது;”
4. நான்கையும் தரித்துக்கொள்: எபே 4:23, 24 “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.”
5. ஐந்தையும் அழித்துப் போடு: கொலோ 3:5 “விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயங்களை அழித்துப்போடுங்கள்.”
6. ஆறையும் வெறுத்து விடு: நீதி 6:16 – 19 “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, தூராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.”
7. ஏழையும் எடுத்துக்கொள்: சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம், இரட்சண்யமென்னும் தலைச்சீரா, தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம், ஜெபம் பண்ணி விழித்திருத்தல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் – எபே 6:14 – 18
8. எட்டையும் விட்டுவிடாதே கூட்டி வழங்குங்கள்: 2பே 1:5 – 7 “நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தொடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.”
9. ஒன்பதையும் அனுபவமாக்கு: கலா 5:22, 23 “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,”
“சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.”
ஆவியின் வரங்கள்: ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பல பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல், ஆவியினாலே விசுவாசம், அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும் அளிக்கப்படுகிறது.” – 1கொரி 12:1, 4 – 12
10. பத்தையும் பற்றிக்கொள்: மத் 22:35 – 40 “அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரை சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.”
“இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுமனதோடும் அன்பு கூறுவாயாக;“
“இது முதலாம் கற்பனை.”
“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக என்பதே.”
“இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.”