Menu Close

ஏழை சகோதரனுக்குச் செய்வது பற்றி உபாகாமத்தில்

• உபா 15:7-11 “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தைக் கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,”
• “அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன் கொடுப்பாயாக.”
• “விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழை சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன் மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்து கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.”
• “அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும் போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச்செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.”
• “தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.”

Related Posts