1. கிட்டி சேர்க்கும் ஏணி: பெற்றோரை விட்டு தூரமாய் யாக்கோபு செல்வதால் தவிப்பு வேண்டாம் “நான் உனக்கு சமீபமாயிருக்கிறேன்” என்று காட்டினார்.
2. விண் எட்டும் ஏணி: யாக்கோபு பார்த்த ஏணியின் ஒரு நுனி வானத்தையும் மறுநுனி பூமியையும் தொட்டிருந்தது. அந்த ஏணியானவர் கிறிஸ்து. பூமியிலிருந்த ஏணியின் பகுதி அவர் மனுஷகுமாரன் என்பதை வெளிப்படுத்தியது. பரலோகத்தில் அவர் தேவகுமாரன் என்பதை விண்ணைத்தொட்ட பகுதி வெளிப்படுத்தியது.
3. வழியான ஏணி: ஏணியின் இரகசியம் பரலோகத்திற்குச் செல்லும் வழியைக் காண்பிக்கிறது. இயேசு ஒருவரே பரலோகத்திற்குச் செல்லும் வழியானவர். அவராலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் செல்ல முடியாது.
4. இணைக்கும் ஏணி: யாக்கோபு கண்ட ஏணி வானத்தையும், பூமியையும் இணைக்கும் ஏணி. இதில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களாகவும், இறங்குகிறவர்களாகவும் இருந்தார்கள். ஜெபத்தை எடுத்துக் கொண்டு பரலோகத்துக்கு ஏறினார்கள். தேவனுடைய பதிலைப் பெற்றுக் கொண்டு கீழே இறங்கினார்கள்.
5. ஏறி வர அழைக்கும் ஏணி: வெளி 4:1 “இங்கே ஏறிவா, பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்.” உலகப் பிரகாரமான ஏணியில் பல சட்டங்கள் இருப்பதைப் போல ஆவிக்குரிய ஏணியிலும் அநேக உபதேச சட்டங்கள் இருக்கின்றன. அவைகளை கீழ்படிதலோடு பின்பற்றி பரலோகம் செல்லலாம்.
6. வானத்தின் வாசலான ஏணி: ஆதி 28:17 “இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்.” யாக்கோபு காலையில் கண் விழித்து இந்த வார்த்தைகளைக் கூறினான். பாதாளத்திற்கு பல வாசல்கள் உண்டு. ஆனால் பரலோகத்திற்குரிய வாசல் ஒன்றே ஒன்று தான். அந்த வாசல் இயேசுவே.