1. ஏசாயா ஆமோத்சின் குமாரன் – 2இரா 20:1
2. ஏசாயா ஒரு பெரிய தீர்க்கதரிசி – 2இரா 19:2, 20:1
3. யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதோம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலிருந்த தீர்க்கதரிசி – ஏசா 1:1
4. ஏசாயா யூதாவையும், எருசலேமையும் குறித்துத் தரிசனம் கண்டான் – ஏசா 2:1
5. உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில் ஆண்டவரைத் தரிசனத்தில் கண்டார் – ஏசா 6:1
6. ஏசாயா பாபிலோனில் நடக்கவிருப்பதைத் தரிசனத்தில் பார்த்தார் – ஏசா 13:1
7. ஏசாயா கர்த்தரின் வார்த்தையின்படி வஸ்திரமில்லாமலும், வெறுங்காலுடனும் நடந்தார் – ஏசா 20:2
8. ஏசாயா எசேக்கியா மரணத்தருவாயிலிருக்கும் பொழுது தீர்க்கதரிசனம் உரைத்தார் – ஏசா 38:1
9. ஏசாயாவுக்கு இரண்டு மகன்கள். சேயார்யாசூப், மகேர்சாலால்அஷ்பாஸ் – ஏசா 7:3, 8:3
10. மனிதரோடு தன்னை ஒப்பிடாமல் ஆண்டவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்ததால் தனது பாவநிலையை உணர்ந்து அறிக்கையிட்டார் – ஏசா 6:5
11. கர்த்தர் அழைத்த பணிக்குத் தன்னை உடனடியாக, முழுமையாக அர்பணித்தார் – ஏசா 6:8
12. நியாயத்தீர்ப்பைக் குறித்து கண்டித்து உணர்த்திய தீர்க்கதரிசனங்களையும், தேற்றுகிற நம்பிக்கையளிக்கிற தீர்க்கதரிசனங்களையும் உரைத்தார்.
13. கிறிஸ்துவின் பாடுகளையும் அதற்கான நோக்கத்தையும் தெளிவாக முன்னறிவித்தார் – ஏசா 52:13 – 15, 53:1 – 12
14. கிறிஸ்துவின் பிறப்பு, மரணம், இரண்டாம் வருகை, அரசாட்சி, புதிய வானம், புதிய பூமி, பல நாடுகளின் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி பல தீர்க்கதரிசனங்களை உரைத்தார். புதிய ஏற்பாட்டில் இவரது சொற்கள் ஐம்பது தடவைக்கு மேல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது – ஏசா 61:1 – 4, 9:6, 7 25:8