அகாஸ்வேரு ராஜாவுக்கு வஸ்தி ராணிக்குப் பதிலாக புது ராணியை தேடினார்கள். யூதாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவனான மொர்தெகாய் எஸ்தர் என்பவளை வளர்த்து வந்தான். அவள் மிகவும் ரூபவதியாயிருந்ததால் அகாஸ்வேரு ராஜாவிடம் கொண்டுவரப்பட்டு சூசான் அரண்மனையிலிலுள்ள யேகாயின் வசம் ஒப்படைக்கப்பட்டாள். எஸ்தரை அழகேற்றுவதற்காக சகலமும் அவளுக்குக் கொடுக்கப்பட்டு ராஜாவிடம் கூட்டி வந்தனர். ராஜா எஸ்தர் மேல் அன்பு வைத்தான். ராஜாவின் சமூகத்தில் அதிக தயையும் பட்சமும் எஸ்தருக்குக் கிடைத்தது. ராஜா ராஜ கிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து பட்டத்து ராணியாக்கினார் – எஸ் 2:4 – 17