தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் குடியிருக்க இடம் அமைக்க யோர்தான் நதி அருகேயுள்ள மரத்தை வெட்டினர். அதில் ஒருவனுடைய இரவல் வாங்கப்பட்ட கோடாரி தண்ணீரில் விழுந்தது. அப்பொழுது அவன் “ஐயோ ஆண்டவனே, அது இரவல் வாங்கப்பட்டதே” என்று கூவினான். எலிசா கோடாரி எங்கு விழுந்தது எனக் கேட்டு அந்த இடத்தில் ஒரு கொம்பை வெட்டி வீசினான். இரும்புக் கோடரி மிதந்து வந்தது – 2இரா 6:1 – 6