Menu Close

ஊழியக்காரரின் கடமைகள்

1. ஜனங்களின் மீறுதல்களையும், பாவங்களையும் பயப்படாமல் எடுத்துச் சொல்வது ஊழியர்களின் கடமை – ஏசா 58:1
2. ஊழியக்காரர்கள் அமரிக்கையாயிராமல் கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ண வேண்டும் – ஏசா 62:6
3. ஜனங்களின் அக்கிரமத்தை சுமக்க வேண்டும் – எசே 4:4
4. உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் – மாற் 16:15
5. சகல ஜாதிகளையும் சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் – மத் 28:19
6. தேவனின் வழிநடத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் – யோவா 21:16
7. ஆலயத்தில் நின்று ஜனங்களுக்கு தேவவார்த்தைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் – அப் 5:20
8. ஜெபம் பண்ணுவதிலும், தேவவசனத்தைப் போதிக்கிறதிலும் இடைவிடாமல் தரித்திருக்க வேண்டும் – அப் 6:4
9. சீஷர்களின் மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்தில் நிலைத்திருக்கச் செய்து தேவராஜ்ஜியத்தில் பிரவேசிக்கப் பண்ண வேண்டும் – அப் 14:22
10. தேவன் உங்களுக்குக் கொடுத்த சபைக்காகவும், விசுவாசிகளுக்காகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் – அப் 20:28
11. சரீரத்தில் பாவம் ஆளாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் – ரோம 6:12
12. நீதிக்குரிய ஆயுதங்களாக அவயங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் – ரோம 6:13
13. புறஜாதிகளிடம் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தை அறிவிக்க வேண்டும் – எபே 3:8
14. வார்த்தைகளிலும், போதகத்திலும் இயேசுவுக்கு நல்ல ஊழியக்காரனாக இருக்க வேண்டும் – 1தீமோ 4:6
15. தேவவரத்தை அனல்மூட்டி எழுப்ப வேண்டும் – 2தீமோ 1:6
16. வெட்கப்படாத ஊழியக்காரனாக, சத்திய வசனத்தை நிதானமாய் போதிக்கிறவனாக உத்தமனாக வாழ வேண்டும் – 2தீமோ 2:15
17. ஊழியக்காரர்கள் தன் குறைவுகளை ஒழுங்குபடுத்த வேண்டும் – தீத் 1:5
18. ஊழியக்காரர் தான் நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபை என்று சாட்சி கொடுக்க வேண்டும் – 1பேது 5:12

Related Posts