உசியா பலப்பட்டபோது அவனுடைய மனம் மேட்டிமையாகி, கர்த்தருக்கு விரோதமாக தூபங்காட்ட ஆலயத்துக்குள் சென்றான். ஆசாரியன் அவனிடம் “தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; அது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களுக்கே உரியது” என்றான். அப்பொழுது உசியா கோபங்கொண்டு தூபக்கலசத்தை தன் கையிலே பிடித்துக் கொண்டு தூபபீடத்தின் முன் நின்றான். அப்படி அவன் நிற்கிற போது அவன் நெற்றியிலே குஷ்டம் உண்டாயிற்று. உசியா உடனே அங்கிருந்து வெளியேற்றப் பட்டான். அவன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக ஒரு தனித்த வீட்டிலே வாசம் பண்ணினான் – 2நாளா 26:16-21