▪ சங் 35:28 “என் நாவு உமது நீதியையும், நாள்முமுழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.”
▪ சங் 71:6 “உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.”
▪ சங் 71:14 “நானோ எப்பொழுதும் கர்த்தரை நம்பிக்கொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.”
▪ சங் 104:33 “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.”
▪ சங் 145:1 “உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்.”
▪ வெளி 4:8 “அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.”
▪ வெளி 5:13 “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுள் அடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.”