• சவுல்: சவுல் ராஜாவாக இருந்தும் தன் தேவனை நம்பாமல் ஒரு அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் சென்று சாமுவேல் தீர்க்கதரிசியை அவள் மூலம் வரவழைத்து, பெலிஸ்தியரும், தேவனும் தன்னைக் கைவிட்டதைக் கூறி “இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான் அதற்கு சாமுவேல் “உன் ராஜ்ஜியத்தைப் பறித்து தாவீதுக்குத் தேவன் கொடுப்பார், உன் ஜனமான இஸ்ரவேலை பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுப்பார். நாளைக்கு நீயும் உன் குமாரனும் என்னோடிருப்பீர்கள்” என்றார் – 1சாமு 28:15 – 20
• ஆதாம்: கர்த்தர் ஆதாமையும், ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஆனால் அவர்களோ தேவன் புசிக்க வேண்டாம் என்று விலக்கின கனியைச் சாப்பிட்டுக் கண்கள் திறக்கப்பட்டனர். கர்த்தருக்குப் பயந்து ஒளிந்து கொண்டனர். எனவே கர்த்தர் சர்ப்பத்துக்கும், ஆதாமுக்கும், ஏவாளுக்கும் சாபம் கொடுத்து ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களை அனுப்பி விட்டார் – ஆதி 3:18, 19