உன் சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்தஜாதியுமாவான். பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக நீதியையும், துதியையும் முளைக்கப் பண்ணுவார். நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன்தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய் – ஏசா 60 :1 – 11, 62:1-12