1. உலகில் மூன்றாவது பிறந்த மனிதன் – ஆதி 4:2
2. முதல் மேய்ப்பர், முதல் இரத்த சாட்சி முதல் நீதிமான் – ஆதி 4:2,8, எபி 11:4
3. விசுவாச மாவீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் மனிதர் – எபி 11:4
4. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றிலும், கொழுமையானவைகளிலும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்தான் – ஆதி 4:4
5. அவனுடைய காணிக்கையைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார் – ஆதி 4:4
6. காயீனால் கொலை செய்யப்பட்டான் – ஆதி 4:8
7. ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிடுகிறது – ஆதி 4:10
8. ஆபேல் உத்தம விசுவாசி – எபி 11:4
9. ஆபேல் மரித்தும் இன்னும் பேசுகிறான் – எபி 11:4