Menu Close

ஆபிரகாம் பொய் சொன்ன இடங்கள் அதனால் ஏற்பட்ட விளைவு

1. ஆபிரகாம் எகிப்துக்கு சமீபமாய் வந்த போது சாராயை தன் சகோதரி என்று பொய் சொன்னான். பார்வோன் அவளைத் தன் அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டான். சாராளினிமித்தம் பார்வோனையும், அவன் வீட்டாரையும் கர்த்தர் மகா வாதைகளால் வாதித்தார். பார்வோன் உண்மையை அறிந்த போது சாராயை ஆபிரகாமோடு அனுப்பி வைத்தான் – ஆதி 12:11-20

2. ஆபிரகாம் கேராரின் வந்த போது தன் மனைவியாகிய சாராளை தன் சகோதரி என்று பொய் சொன்னான். அங்குள்ள ராஜாவாகிய அபிமலேக்கு சாராளை அழைப்பித்தான். கர்த்தர் சாராளைக் குறித்து சொப்பனத்தில் ராஜாவுக்கு எச்சரித்தார். அபிமலேக்கு உத்தம இருதயம் கொண்டவன் என்று தேவன் அறிந்ததால் சொப்பனத்தில் அவனை எச்சரித்தார். “அவளை அனுப்பாவிட்டால் உங்களைச் சார்ந்த அனைவரும் சாகவே சாவார்கள்.” என்றார். ஆனால் சாராளினிமித்தம் அபிமலேக்கின் வீட்டாரின் கர்ப்பத்தை அடைத்தார். ஆபிரகாம் வேண்டிய போது அவன் வீட்டாரை பிள்ளை பெறும்படி அநுக்கிரகம் பண்ணினார் – ஆதி 20 : 2-18

Related Posts