1. மெசொப்பொத்தாமியா நாட்டில் இருக்கும்போது தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமானதால் தன் தகப்பனுடன் அங்கிருந்து புறப்பட்டான் – அப் 7 :2 ஆதி 11:31
2. தன் தகப்பன் மரித்து ஆரானில் இருக்கும் போது தேவதரிசனத்தின்படி தனது 75 வது வயதில் கர்த்தர் காண்பிக்கும் தேசத்துக்குப் புறப்பட்டான் – ஆதி 12:1-5
3. ஆரானிலிருந்து தேவ வார்த்தைக்குக் கீழ்படிந்து கானானுக்கு வந்த போது தேவன் அவனுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று வாக்களித்தார் – ஆதி 12:5-7
4. லோத்து பிரிந்த பின் நாலாவதாக தேவன் அவனுக்குத் தரிசனமாகி “நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும், உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்” என்றார் – ஆதி 13:1-18
5. லோத்தையும் அவன் குடும்பத்தையும் இராஜாக்களோடு யுத்தம் பண்ணி மீட்ட பின் ஆபிரகாமைப் பலப்படுத்தி “நான் உனக்குக் கேடகமும்,உனக்கு மகாப் பெரிய பலனுமாயிருக்கிறேன்” என்று கூற 5வது தரிசனம் உண்டாயிற்று – ஆதி 15 : 1-21
6. ஆபிரகாமின் பெயரை மாற்றவும், விருத்தசேதன உடன்படிக்கை ஏற்படுத்தவும் ஆறாவது தரிசனம் உண்டாயிற்று. “திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்” என்றும் “திரளாய்ப் பெருகப் பண்ணுவேன் என்றும் ஆசிகளைக் கொடுத்தார் – ஆதி 17:1-27
7. சோதோமின் அழிவைக் குறித்து அறிவிக்க கர்த்தர் மம்ரேயின் சம பூமியில் ஏழாவதாக கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமானார். அவன் கொடுத்த விருந்தையும் சாப்பிட்டார் – ஆதி 18 : 1-33
8. ஈசாக்கு பால் மறந்த பின் ஆகாரையும் இஸ்மவேலையும் வெளியே அனுப்பி விடும்படி சொல்ல கர்த்தர் எட்டாவது தரிசனமானார் – ஆதி 21:8-12
9. ஆபிரகாமின் விசுவாசத்தை சோதிக்க ஈசாக்கைப் பலி செலுத்தச் சொல்லி ஒன்பதாவது முறை தரிசனமானார் – ஆதி 22:1,2
10. ஈசாக்கைப் பலிபீடத்தில் கிடத்தப் பட்டிருக்கும் போது கர்த்தர் பத்தாவது தடவையாக தரிசனமாகி அவனோடு பேசி பூரண ஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டார் – ஆதி 22:3-12, 15-18