Menu Close

ஆபிரகாமைக் கர்த்தர் சோதித்த விதம்

கர்த்தர் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று பலிசெலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்படிந்து பலிசெலுத்தச் சென்றான். ஈசாக்கை பலிசெலுத்த ஆரம்பித்தபோது ஆபிரகாமின் விசுவாசத்தைக் கண்ட தேவன் “ஆபிரகாமே பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, நீ அவனை ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால், நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்.” என்றார். பின்பு கர்த்தரின் வார்த்தையின்படி புதரிலே கொம்புகள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டு, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாக பலி செலுத்தினான். அந்த இடத்திற்கு “யேகோவாயீரே” என்று பெயரிட்டான். அதற்கு தேவனுடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று அர்த்தமாம் – ஆதி 22:1-19

Related Posts