Menu Close

ஆபிரகாமுடைய ஜீவியத்தில் வந்த சோதனைகள்

1. தன் சொந்த தேசத்தையும் ஜனத்தையும் வீட்டையும் விட்டு போகிற இடம் தெரியாமல் புறப்பட்டுச் சென்றது – எபி 11:8, 9

2. கானானில் வந்த பஞ்சத்தால் எகிப்தில் தங்கப் போனதும், சாராளை பார்வோனின் அரண்மனைக்குப் போகவிட்டதும் – ஆதி 12:9-20

3. கூட வந்த லோத் பிரிந்த வேளை – ஆதி 13:1-11

4. லோத்தின்குடும்பம் சிறைப்பட்டு போன போது அவர்களை மீட்க யுத்தத்துக்குப் போனது – ஆதி 14:1-16

5. அவனது 99 வது வயதில் விருத்தசேதனம் பண்ணியபோது – ஆதி 17:10-14 23-26

6. அவர்கள் கேராருக்கு வந்த போது அபிமலேக் ராஜாவிடம் சாராளை அனுப்பிய போது – ஆதி 20:2-18

7. ஈசாக்குக்கும் இஸ்மவேலுக்கும் சண்டை வந்த போது ஆகாரையும், இஸ்மவேலையும் வனாந்தரத்திற்கு அனுப்பி விட்ட போது -. ஆதி 21:9-21

8. அபிமலேக்கின் வேலைக்காரர் துரவைக் கைவசப்படுத்தின போது – ஆதி 21:25 –32

9. தன் ஒரே மகனைப் பலி கொடுக்க கொண்டு போன போது – ஆதி 22 :1-12

10. சாராளின் மரணத்தின் போது – ஆதி 23:1, 2

Related Posts