1. தலை, தலை மயிர்: உன் 5:11 “அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.”
2. கண்கள்: உன் 5:12 “அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப் பட்டவைகளுமாயிருக்கிறது.”
3. கன்னங்கள்: உன் 5:13 “அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப் போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப் போலவுமிருக்கிறது;”
4. உதடுகள்: உன் 5:13 “அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைபோளம் அதிலிருந்து வடிகிறது.”
5. கரங்கள்: உன் 5:14 “அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது;”
6. அங்கம்: உன் 5:14 “அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத்தந்தத்தைப் போலிருக்கிறது.”
7. கால்கள்: உன் 5:15 “அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப் போலிருக்கிறது.”
8. ரூபம்: உன் 5:15 “அவர் ரூபம் லீபனோனைப் போலவும் கேதுருக்களைப் போலவும் சிறப்பாயிருக்கிறது.”
9. வாய்: உன் 5:16 “அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது;”
10. அழகு: உன் 5:16 “அவர் முற்றிலும் அழகுள்ளவர்.”
11. நடக்கை: உன் 3:6 “வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப் போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?”
உன் 5:10 “என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்.”