ஈசாக்கும். இஸ்மவேலும் வாக்குவாதம் பண்ணினார்கள். சாராள் ஈசாக்கினிமித்தம் ஆகாரையும், இஸ்மவேலையும் துரத்திவிட வேண்டும் என்று ஆபிரகாமிடம் சொன்னாள். ஆபிரகாம் ஒரு துருத்தி தண்ணீரையும், அப்பத்தையும் எடுத்து ஆகாரின் தோளில் வைத்து பிள்ளையுடன் அனுப்பி வைத்தான். ஆகார் தண்ணீர் தீர்ந்தபோது பெயர்செபா வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள். தன் பிள்ளையை ஒரு செடியின் கீழ் விட்டு, பிள்ளை சாகிறதைப் பார்க்க மாட்டேன் என்று தூரத்தில் போய் அழுதாள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்போது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள் – ஆதி 21:8-19