1. ஆதாமிடமும், ஏவாளிடமும் நன்மை, தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது என தேவன் கட்டளையிட்டிருந்தும் மீறி சாப்பிட்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வேதனையும், மரணமும் மனித குலத்தை தாக்கியது – ஆதி 3:1 – 6, 24
2. நாதாபும், அபியூவும் பலிபடைப்புக்குப் பலிபீட அக்கினியை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று – லேவி 8:12, 13 தெரிந்தும் கீழ்படியாமல் அந்நிய அக்கினியை பயன்படுத்தி இறந்து போனார்கள் – லேவி 10:1, 2
3. மோசேயிடம் கர்த்தர் தண்ணீரைத் தர கன்மலைப் பார்த்துப் பேசு என்று கட்டளையிட்டும், மோசே தன் கையை ஓங்கி கோலினால் இரண்டு தடவை அடித்ததால் கானானுக்குள் நுழைய முடியவில்லை – எண் 20:8, 11, 12
4. கர்த்தர் சவுலிடம் அமலேக்கியரை முறியடித்து அவர்களுக்குள்ள எல்லாவற்றையும் கொன்று போடக் கட்டளையிட்டார். ஆனால் சவுல் கால்நடைகளில் சிறந்தனவற்றையும் அவர்களது அரசரையும் கொல்லவில்லை. எனவே கர்த்தர் சவுலை ராஜாவாயிராதபடி புறக்கணித்துத் தள்ளினார் – 1சாமு 15:3, 21, 26
5. ஊசா உடன்படிக்கை பெட்டியைத் தொட ஆசாரியர்களுக்கு மட்டுமே உரிமை என்றறிந்ததும் – எண் 4:15 அவசரத்தில் பெட்டியைப் பிடித்ததால் கர்த்தர் கோபத்தில் அவனை அடித்து அவன் இறந்தான் – 2சாமு 6:6, 7
6. உசியாவுக்கு ஆலயத்தில் தூபங்காட்ட ஆசாரியர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு எனத் தெரிந்தும் – எண் 16:39, 40 தான் தூபங் காட்ட பரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்றதால் தொழுநோயால் பாதிக்கப்பட்டான் – 2நாளா 26:18, 19