வேதாகம வினா விடை

மத்தேயு Quiz கேள்வி பதில்

மத்தேயு அதிகாரம் 1 – 10 Quiz கேள்வி பதில்

  1. இரட்டை குழந்தைகளை யூதாவுக்குப் பெற்றெடுத்தவள் யார்?
  2. ராகாப் பெற்றெடுத்த மகன் பெயர் என்ன?
  3. மரியாளின் புருஷனாகிய யோசேப்பின் தந்தை யார்?
  4. தாவீது முதல் பாபிலோன் சிறையிருப்பு வரை உள்ள தலைமுறைகள் எத்தனை?
  5. பெத்லகேம் எந்த நாட்டில் உள்ளது?
  6. ஏரோது யாரை இரகசியமாய் அழைத்து விசாரித்தான்?
  7. சாஸ்த்திரிகளுக்கு வழிகாட்டி சென்றது எது?
  8. புலம்பலும் அழுகையும் எங்கே கேட்கப்பட்டது?
  9. தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்தது யார்?
  10. வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் யாருடையது?
  11. எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது இயேசு யாரிடம் கூறினார்?
  12. இயேசுவை வனாந்திரத்திற்கு கொண்டு சென்றவர் யார்?
  13. பிசாசானவன் இயேசுவை விட்டு விலகியவுடன் அவருக்குப்பணிவிடை செய்தவர்கள் யார்?
  14. மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று கூறிய தீர்க்கதரிசி யார்?
  15. செபெதேயுவின் குமாரர் இருவர் பெயர் என்ன?
  16. எவர்களுடைய நீதியைக்காட்டிலும் நம்முடைய நீதி அதிகமாயிருக்க வேண்டும்?
  17. மகாராஜாவினுடைய நகரம் எது?
  18. தங்களை சிநேகிக்கிறவர்களை மட்டுமே சிநேகிக்கிறவர்கள் யார்?
  19. சரீரத்தின் விளக்காயிருப்பது எது?
  20. ஆகாரத்தைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?
  21. முதலாவது எதைத் தேட வேண்டும்?
  22. பரிசுத்தமானதை எதற்குக் கொடுக்க கூடாது?
  23. முத்துக்களை எதன் முன் போடக்கூடாது?
  24. எதற்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது?
  25. ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு நம்மிடம் வருபவர்கள் யார்?
  26. பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பவன் யார்?
  27. இயேசு மலையிலிருந்து இறங்கினபோது வந்து அவரைப் பணிந்து கொண்டவன் யார்?
  28. தன் வேலைக்காரன் குணமடைய இயேசுவை வேண்டினவன் யார்?
  29. புறம்பான இருளிலே தள்ளப்படுபவன் யார்?
  30. இயேசு தொட்டவுடன் ஜுரம் நீங்கி குணமடைந்தாள் யார்?
  31. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களை சுமந்தார் என்று கூறிய தீர்க்கதரிசி யார்?
  32. நீர் எங்கே போனாலும் உம்மைப் பின் பற்றி வருவேன் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
  33. எந்த பட்டணத்தார் இயேசுவைத் தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும் படி வேண்டிக்கொண்டார்கள்?
  34. தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றவன் யார்?
  35. ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த எந்த மனிதனை இயேசு தம்மைப் பின்பற்றும்படி அழைத்தார்?
  36. யார் தன் ஆகாரத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான்?
  37. எது எண்ணப்பட்டிருக்கிறது?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

மத்தேயு அதிகாரம் 11 – 20 Quiz கேள்வி பதில்

  1. காவலில் இருக்கும் போது கிறிஸ்துவின் கிரியைகளைக் கேட்டவன் யார்?
  2. தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் யார்?
  3. வருகிறவனாகிய எலியா இயேசு யாரை குறிப்பிட்டார்?
  4. தன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுவது எது?
  5. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட நகரம் எது?
  6. ஓய்வு நாளில் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து தேவசமுகத்து அப்பங்களை புசித்தவன் யார்?
  7. இயேசு வாக்குவாதம் செய்யமாட்டார் என்று முன்னுரைத்த தீர்க்கதரிசி யார்?
  8. பிசாசுகளின் தலைவன் பெயர் என்ன?
  9. யாருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படுவதில்லை?
  10. இருதயத்தின் நிறைவினால் பேசுவது எது?
  11. வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் யாருடைய அடையாளம் கொடுக்கப்படும் என்று இயேசு கூறினார்?
  12. விதை என்பது எதைக் குறிக்கிறது?
  13. ஆகாயத்துப் பறவைகள் தன் கிளைகளில் வந்தடையத்தக்க பூண்டு எது?
  14. நிலம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
  15. அறுப்பு என்பது எதைக் குறிக்கிறது?
  16. தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போல பிரகாசிப்பவர்கள் யார்?
  17. இயேசுவின் கீர்த்தியை கேள்விப்பட்ட காற்பங்கு தேசாதிபதி யார்?
  18. ஏரோது இயேசுவை யாரென்று கூறினான்?
  19. காணாமற் போன ஆடுகள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்?
  20. ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது இயேசு யாரிடம் கூறினார்?
  21. இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் யார் யாரிடம் கூறியது?
  22. பரலோகத்தின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்படும் என இயேசு கூறினார்?
  23. இயேசு தம் பாடுமரணங்களைக்குறித்து யாரிடம் கூறினார்?
  24. எனக்கு பின்னாகப் போ சாத்தானே என்று இயேசு யாரைப் பார்த்து கூறினார்?
  25. இயேசு யாருக்கு முன்பாக மறுரூபமானார்
  26. மறுரூபமான இயேசுவோடு பேசுகிறவர்களாகக் காணப்பட்டவர்கள் யார்?
  27. எந்த தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்டார்?
  28. யாரை இயேசுவின் சீஷர்களால் குணமாக்கக் கூடாமற் போயிற்று?
  29. எதன் வாயிலிருந்து வரிப்பணம் எடுத்துக் கொடுக்க இயேசு பேதுருவிடம் கூறினார்?
  30. நியாயம் விசாரிக்க எத்தனை சாட்சிகள் வேண்டும்?
  31. தள்ளுதற் சீட்டை கொடுத்து தள்ளி விடலாமென்று கட்டளையிட்டவர் யார்?
  32. இயேசுவிடம் வந்து உம்மிடம் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றவள் யார்?

மத்தேயு அதிகாரம் 21 – 28 Quiz கேள்வி பதில்

  1. இயேசு எங்கே இராத்தங்கினார்?
  2. ஜெபத்திலே கேட்பதெல்லாம் பெறுவதற்கு அடிப்படை எது?
  3. போகிறேன் என்று சொல்லியும் திராட்சை தோட்டத்திற்கு போகாதவன் யார்?
  4. நீதிமார்க்கமாய் மக்களிடம் வந்தவன் யார்?
  5. ஜனங்கள் இயேசுவை யார் என்று எண்ணினார்கள்?
  6. நல்லவர் பொல்லாதவர்களால் நிறையப்பட்டிருந்தது எது?
  7. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
  8. இயேசுவை சோதிக்கும்படியாக வந்தவன் யார்?
  9. நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் எத்தனை கற்ப்பனைகளில் அடங்கியிருக்கிறது?
  10. பரிசுத்த ஆவியினாலே இயேசுவை ஆண்டவர் என்று கூறியது யார்?
  11. தங்கள் கிரியைகளை மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறவர்கள் யார்?
  12. வேதபாரகரையும் பரிசேயரையும் தேவன் எப்படி அழைத்தார்?
  13. நீதிமான்களின் சமாதிகளை சிங்கரிக்கிறவர்கள் யார்?
  14. தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலை செய்யப்பட்டவன் யார்?
  15. எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று இயேசு கூறினார்?
  16. அக்கிரமம் மிகுதியாவதினால் தணிந்து போவது எது?
  17. யார் இரட்சிக்கப்படுவான்?
  18. பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து கூறிய தீர்க்கதரிசி யார்?
  19. வாசிக்கிறவன் என்ன செய்யக்கடவன் என்று இயேசு கூறினார்?
  20. யார் நிமித்தம் முடிவு நாட்கள் குறைக்கப்படுகிறது?
  21. பிணம் எங்கேயோ அங்கே வந்து கூடுவது எது?
  22. வானமும் பூமியும் ஒழிந்து போகும் ஆனால் ஒழிந்து போகாதது எது?
  23. மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர் கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் எப்பொழுது உண்டாயிற்று?
  24. மணவாளனோடு கலியாண வீட்டில் பிரவேசித்தவர்கள் யார்?
  25. உண்மையும் உத்தமும்மான ஊழியக்காரர்கள் என்று பாராட்டப்பட்டவர்கள் யார்?
  26. பரிமள தைலம் தன் மேல் ஊற்றப்பட்டது எதற்கு அடையாளமானது என்று இயேசு கூறினார்?
  27. பாவமன்னிப்பு உண்டாகும் படி அநேகருக்காக சிந்தப்படுவது எது?
  28. உயிர்த்தெழுந்தபின் இயேசு எங்கே போவதாகக் கூறினார்?
  29. எது உற்சாகமுள்ளது என்று இயேசு கூறினார்?
  30. எத்தனை முறை இயேசு உம்சித்தம் ஆகக்கடவது என்று கெத்சமனேயில் ஜெபம்பண்ணினார்?
  31. இயேசு எதைச் சொன்னதாகப் பிரதான ஆசாரியன் கூறினான்?
  32. இயேசுவின் வார்த்தைகளை நினைத்து மனங்கசந்து அழுதவன் யார்?
  33. யூதாசின் காசினால் யாருடைய நிலம் வாங்கப்பட்டது?
  34. குயவனுடைய நிலத்தை வாங்குவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்?
  35. காவல்பண்ணப்பட்டவர்களில் பேர் போனவனாயிருந்தவன் யார்?
  36. பிராதான ஆசாரியர் இயேசுவை எதினாலே ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து கொண்டான்?
  37. இயேசுவினிமித்தம் சொப்பனத்தில் வெகுபாடுபட்டவள் யார்?
  38. பிலாத்து இயேசுவை யாரென்று ஜனங்களுக்கு முன்பாக கூறினான்?
  39. இயேசுவின் வலது கையில் கொடுக்கப்பட்டது என்ன?
  40. கொல்கொதா என்பதன் இன்னொரு பெயர் என்ன?
  41. ஆறாம் மணிமுதல் ஒன்பதாம் மணிவரை பூமியெங்கும் உண்டானது எது?
  42. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எப்படி சத்தமிட்டுக் கூப்பிட்டார்?
  43. இயேசு தம்முடைய ஆவியை விட்டபோது கல்லறைத் திறந்து யாருடைய சரீரங்கள் எழுந்திருந்தன?
  44. சம்பவித்த காரியங்களை கண்டு மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்று கூறியவன் யார்?
  45. வாரத்தின் முதல் நாள் கல்லறையைப் பார்க்க வந்தவர்கள் யார்?
  46. கர்த்தருடைய தூதனின் ரூபம் எதைப் போல இருந்தது?
  47. உயிர்த்தெழுந்த இயேசு எங்கே போவதாக தூதன் கூறினான்?
  48. இயேசுவை களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லும்படி காவல்சேவகருக்கு பணம் கொடுத்தவர்கள் யார்?
  49. ஸ்திரீகளுக்கு எதிர்ப்பட்டு இயேசு அவர்களிடம் முதலில் என்னக் கூறினார்?
  50. ஸ்திரீகளை நோக்கி பயப்படாதிருங்கள் என்று கூறியவர் யார்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Sis. Rekha

View Comments

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago