வேதாகம வினா விடை

வெளிப்படுத்தின விசேஷம் Quiz கேள்வி பதில்

வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 1 – 7 Quiz கேள்வி பதில்

  1. திவ்ய வாசகன் என்பவர் யார்?

யோவான். வெளி 1:1

  1. இயேசு கிறிஸ்து யாரை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனுக்கு வெளிப்படுத்தினார்?

தம்முடைய தூதன். வெளி 1:1

  1. தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்தவர் யார்?

யோவான். வெளி 1:2

  1. யோவான் யாரை குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார்?

இயேசு கிறிஸ்துவை. வெளி 1:2

  1. எதை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும் பாக்யவான்கள்?

வெளிப்படுத்தின தீர்க்கதரிசன வசனங்கள். வெளி 1:3

  1. சமீபமாயிருப்பத எது?

காலம். வெளி 1:3

  1. யோவான் எங்கே உள்ள சபைகளுக்கு கடிதம் எழுதினார்?

ஆசியா. வெளி 1:4

  1. ஆசியாவில் இருந்த சபைகள் எத்தனை?

ஏழு. வெளி 1:4

  1. உண்மையுள்ள சாட்சி என்று அழைக்கப்படுபவர் யார்?

இயேசு கிறிஸ்து. வெளி 1:5

  1. மரித்தோரிலிருந்து முதற் பிறந்தவர் யார்?

இயேசு கிறிஸ்து. வெளி 1:5

  1. யோவான் இருந்த தீவின் பெயர் என்ன?

பத்மு தீவு. வெளி 1:9

  1. யோவான் எவைகளினிமித்தம் பத்மூ தீவில் இருந்தார்?

தேவவசனம், கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி. வெளி 1:9

  1. ஏழு சபையின் பெயர்கள் என்ன?

எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கியா. வெளி 1:11

  1. மனுஷகுமாரனுக்கொப்பானவரின் வாயிலிருந்து புறப்பட்டது எது?

இருபுறமும் கருக்குள்ள பட்டயம். வெளி 1:16

  1. எவைகளின் இரகசியத்தை எழுதும் படி மனுஷகுமாரன் யோவானிடம் கூறினார்?

ஏழு நட்சத்திரங்கள், ஏழு பொன் குத்து விளக்குகள். வெளி 1:20

  1. ஏழு குத்து விளக்குகள் எதைக் குறிக்கும்?

ஏழு சபைகள். வெளி 1:20

  1. ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட சபை எது?

எபேசு. வெளி 2:4

  1. எபேசு சபை எந்த மதஸ்தாரின் கிரியைகளை வெறுத்தது?

நிக்கொலாய். வெளி 2:6

  1. தேவனுடைய பரதீசின் மத்தியிலிருப்பது எது?

ஜீவ விருட்சம். வெளி 2:7

  1. ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் தரித்திரத்தையுடைய சபை எது?

சிமிர்னா. வெளி 2:9

  1. மரணபரியந்தம் உண்மையாயிருப்பதால் கிடைப்பது என்ன?

ஜீவகிரீடம். வெளி 2:19

  1. சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் குடியிருந்த சபை எது ?

பெர்கமு. வெளி 2:13

  1. சாத்தான் குடிகொண்டிருந்த இடத்தில் உண்மையுள்ள சாட்ச்சியாயிருந்தவன் யார்?

அந்திப்பா. வெளி 2:13

  1. யாருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் பெர்கமு சபையில் உள்ளனர்?

பிலேயாம். வெளி 2:14

  1. ஜெயங்கொள்ளுகிறவனுக்கு எது புசிக்கக்கொடுக்கப்படும்?

மறைவான மன்னா. வெளி 2:17

  1. வெண்மையான குறிகல்லில் எழுதப்பட்டிருப்பது என்ன?

புதிய நாமம். வெளி 2:17

  1. தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லுகிற ஸ்திரீயானவள் யார்?

யேசபேல். வெளி 2:20

  1. உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்ததாயிருந்த சபை எது?

சர்தை. வெளி 3:2

  1. திருடனைப் போல கர்த்தர் எச்சபையின் மேல் வருவார்?

சர்தை சபை. வெளி 3:3

  1. திறந்த வாசல் எச்சபையினருக்கு முன்பாக வைக்கப்படும்?

பிலதெல்பியா. வெளி 3:8

  1. பூச்சக்கரத்தின் மீது வரும் சோதனை காலத்திற்குத் தப்பும் சபை எது?

பிலதெல்பியா. வெளி 3:10

  1. தேவனுடைய நகரத்தின் நாமம் என்ன?

புதிய எருசலேம். வெளி 3:12

  1. குளிருமல்ல அனலுமல்ல என்றழைக்கப்பட்ட சபை எது?

லவோதிக்கேயா. வெளி 3:15

  1. யோவானோடே பேசின சத்தம் எதைப் போன்றது?

எக்காள சத்தம். வெளி 4:1

  1. சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் பார்வைக்கு எவைகளுக்கு ஒப்பாயிருந்தார்?

வச்சிரக்கல், பதுமராகம். வெளி 4:3

  1. சிங்காசனத்தை சுற்றியிருந்தது எது?

வானவில். வெளி 4:3

  1. வானவில்லானது பார்வைக்கு எதைப்போல தோன்றியது?

மரகதம். வெளி 4:3

  1. ஏழு அக்கினி தீபங்கள் என்பது எதைக் குறிக்கின்றது?

தேவனுடைய ஏழு ஆவிகள். வெளி 4;5

  1. சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தது எது?

கண்ணாடிக்கடல். வெளி 4:6

  1. கண்ணாடிக்கடல் எதற்கு ஒப்பாயிருந்தது?

பளிங்கு. வெளி 4:6

  1. சிங்காசனத்தின் மத்தியிலும் அதைச் சுற்றிலும் எத்தனை ஜீவன்களிருந்தன?

நான்கு. வெளி 4:6

  1. முதலாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது?

சிங்கம். வெளி 4:7

  1. இரண்டாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது?

காளை. வெளி 4:7

  1. மூன்றாம் ஜீவன் எதைப்போன்ற முகமுள்ளதாயிருந்தது?

மனுஷ முகம். வெளி 4:7

  1. நான்காம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது?

பறக்கிற கழுகு. வெளி 4:7

  1. உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட புஸ்தகம் எத்தனை முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்தது??

ஏழு. வெளி 5:1

  1. புஸ்தகம் யாரும் திறக்க பாத்திரவானாயிராததால் அழுதவர் யார்?

யோவான். வெளி 5: 4

  1. தாவீதின் வேர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

இயேசு. வேளி 5:5

  1. புஸ்தகத்தை திறப்பதற்கு ஜெயம் கொண்டவர் யார்?

இயேசு கிறிஸ்து. வெளி 5:5

  1. தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்காலம் யாருடைய ஜெபங்களால் நிறைந்திருக்கிறது?

பரிசுத்தவான்கள். வெளி 5:8

  1. நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடியவர்கள் யார்?

4 ஜீவன்களும் 24 மூப்பர்களும். வெளி 5:10

  1. முதல் முத்திரையை உடைத்த போது யோவான் எதைக் கண்டார்?

வெள்ளைக் குதிரை. வெளி 6:1&2

  1. வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன?

ஒரு கிரீடம். வெளி 6:2

  1. இரண்டாம் முத்திரையை உடைத்த போது புறப்பட்டது எது?

சிவப்புக் குதிரை. வெளி 6:4

  1. சிவப்பு குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலிருந்து எதை எடுத்துப் போடும் படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது?

சமாதானம். வெளி 6:4

  1. சிவப்புக் குதிரையின் மேலிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன?

ஒரு பெரிய பட்டயம். வெளி 6:4

  1. எவைகளை சேதப்படுத்தாதே என்ற சத்தத்தை யோவான் கேட்டார்?

எண்ணெய் திராட்சரசம். வெளி 6:6

  1. மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு பெயர் என்ன?

மரணம். வெளி 6:8

  1. மரணம் என்பவனின் பின் சென்றது எது?

பாதாளம். வெளி 6:8

  1. இரத்த சாட்சிகள் எதைக் குறித்து ஆண்டவரிடம் முறையிட்டார்கள்?

தங்கள் இரத்தம். வெளி 6:10

  1. இரத்த சாட்சிகளுக்கு கொடுக்க பட்டது எது?

வெள்ளை அங்கிகள். வெளி 6:11

  1. எந்த முத்திரை உடைக்கப்பட்டபோது பூமி மிகவும் அதிர்ந்தது?

ஆறாம் முத்திரை. வெளி 6:12

  1. ஆறாம் முத்திரை உடைபட்ட போது சூரியன் எதைப்போல கறுத்தது?

கறுப்புக் கம்பளி. வெளி 6:12

  1. ஆறாம் முத்திரை உடைபட்ட போது சந்திரன் எதைப் போலானது?

இரத்தம். வெளி 6:12

  1. ஆறாம் முத்திரை உடைபட்ட போது பூமியில் விழுந்தவை எவை?

நட்சத்திரங்கள். வெளி 6:13

  1. சுருட்டப்பட்ட புஸ்தகம் போல விலகிப்போனது எது?

வானம். வெளி 6:14

  1. தங்கள் இடங்களை விட்டு அகன்று போனவை எவை?

மலைகள், தீவுகள். வெளி 6: 14

  1. நான்கு திசையின் தூதர்கள் எதைப் பிடித்திருந்தார்கள்?

நான்கு காற்றுகள். வெளி 7:1

  1. ஜீவனுள்ள தேவனுடைய வேறொரு தூதன் எங்கேயிருந்து ஏறி வந்தான்?

சூரியன் உதிக்குந்திசை. வெளி 7:2

  1. சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறி வந்த தூதனின் கையில் இருந்தது என்ன?

ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல். வெளி 7:2

  1. யாருடைய நெற்றிகளில் முத்திரை போடுமட்டும் சேதமிருக்காது?

தேவனுடைய ஊழியக்காரர்கள். வெளி 7:3

  1. இஸ்ரவேலரில் முத்திரை போடப்பட்டவர்களின் தொகை எவ்வளவு?

ஒரு லட்சத்திநாற்பத்திநாலாயிரம் பேர். வெளி 7:4

  1. எண்ணக்கூடாத திரளான ஜனங்கள் எதை தரித்திருந்தார்கள்?

வெள்ளை அங்கி. வெளி 7:9

  1. வெள்ளை அங்கிதரித்திருந்தோர் எதற்கு முன்பாக நின்றார்கள்?

சிங்காசனம். வெளி 7:9

  1. வெள்ளை அங்கி தரித்திருந்தோர் யாருக்கு முன்பாக நின்றார்கள்?

ஆட்டுக்குட்டியானவர். வெளி 7:9

  1. வெள்ளை அங்கித் தரித்தவர்கள் தங்கள் அங்கிகளை யாருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்கள் ?

ஆட்டுக்குட்டியானவர். வெளி 7:14

  1. வெள்ளை அங்கி தரித்தவர்கள் எங்கே நடத்தப்படுவார்கள்?

ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு. வெளி 7:17

  1. ஏழாம் முத்திரையை உடைத்த போது பரலோகத்தில் உண்டானது என்ன?

அமைதல். வெளி 8:1

 

வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 8 – 14 Quiz கேள்வி பதில்

  1. பரலோகத்தில் எவ்வளவு நேரம் அமைதல் உண்டாயிற்று?

ஏறக்குறைய அரைமணி நேரம். வெளி 8:1

  1. ஏழாம் முத்திரையை உடைத்த போது எத்தனை தூதர்கள் வந்தார்கள்?

ஏழு. வெளி 8:2

  1. ஏழு தூதர்களின் கையில் கொடுக்கப்பட்டது என்ன?

ஏழு எக்காளங்கள். வெளி 8:2

  1. சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தது என்ன?

பொற்பீடம். வெளி 8:3

  1. சகலபரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும் படி தூதனுக்குக் கொடுக்கப்பட்டது என்ன?

மிகுந்த தூபவர்க்கம். வெளி 8:3

  1. பலிபீடத்து நெருப்பினால் நிரப்பப்பட்டது எது?

தூபகலசம். வெளி 8:5

  1. முதலாம் தூதன் எக்காளம் ஊதும் போது உண்டானவை எவை?

கல்மழையும் அக்கினியும். வெளி 8:7

  1. எவைகளில் மூன்றிலொரு பங்கு சேதமாயிற்று?

கப்பல்கள். வெளி 8:9

  1. தீவட்டியைப் போல எரிந்து வானத்திலிருந்து விழுந்தது எது?

பெரிய நட்சத்திரம். வெளி 8:10

  1. தீவட்டியைப் போல் விழுந்த நட்சத்திரத்தின் பெயர் என்ன?

எட்டி. வெளி 8:11

  1. ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதிய போது வானத்திலிருந்து விழுந்தது எது?

நட்சத்திரம். வெளி 9:1

  1. பாதாளக்குழியின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்பட்டது?

ஐந்தாம் தூதன். வெளி 9:1

  1. பாதாளக்குழியின் புகையிலிருந்து எவைகள் புறப்பட்டு வந்தன?

வெட்டுக்கிளிகள். வெளி 9:3

  1. வெட்டுக்கிளிகளுக்கு எதற்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது?

பூமியிலுள்ள தேள்களின் வல்லமை. வெளி 9:3

  1. தேவனுடைய முத்திரையைத் தரித்திராதவர்களை சேதப்படுத்துவது எது?

வெட்டுக்கிளிகள். வெளி 9:4

  1. வெட்டுக்கிளிகளுக்கு எவர்களைக் கொலை செய்ய உத்தரவு கொடுக்கப்படவில்லை?

நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷர். வெளி 9:5

  1. வெட்டுக்கிளிகள் எத்தனை மாதம் தங்கள் உத்தரவுகளை நிறைவேற்றும் ?

5 மாதம். வெளி 9:4&5

  1. மனுஷர்கள் எதைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள்?

சாவு. வெளி 9:6

  1. மனுஷர்களுக்கு விலகி ஓடிப்போவது எது?

சாவு. வெளி 9:6

  1. யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருப்பது எது?

வெட்டுக்கிளிகளின் உருவம். வெளி 9:7

  1. வெட்டுக்கிளிகளின் தலைகளின் மேல் இருந்தது என்ன?

பொன்மயமான கிரீடம் போன்றவை. வெளி 9:7

  1. வெட்டுக்கிளிகளின் முகங்கள் யாருடைய முகங்கள் போலிருந்தன?

மனுஷர். வெளி 9:7

  1. எதனுடைய கூந்தல் ஸ்திரீகளின் கூந்தலைப் போலிருந்தது?

வெட்டுக்கிளிகள். வெளி 9:8

  1. வெட்டுக்கிளிகளின் சிறகுகளின் இரைச்சல் எதன் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன?

இரதங்கள். வெளி 9:9

  1. வெட்டுக்கிளிகளின் ராஜன் யார்?

பாதாளத்தின் தூதன். வெளி 9:11

  1. எபிரேய பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன?

அபெத்தோன். வெளி 9:11

  1. கிரேக்க பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன?

அப்பொல்லியோன். வெளி 9:11

  1. எந்த நதியண்டையில் தூதர்கள் கட்டப்பட்டிருந்தார்கள்?

ஐபிராத்து. வெளி 9:14

  1. எத்தனை தூதர்கள் ஐபிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருந்தார்கள்?

4 வெளி 9:14

  1. மனுஷரில் எத்தனை பங்கைக் கொல்லும் படி தூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது?

மூன்றில் ஒரு பங்கு. வெளி 9:15

  1. குதிரைச் சேனைகளாகிய இராணுவங்களின் தொகை எவ்வளவு?

இருபது கோடி. வெளி 9:16

  1. எதனுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருந்தன?

குதிரைகள். வெளி 9:17

  1. எதனுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன?

குதிரைகள். வெளி 9:17

  1. குதிரைகளின் வால்கள் எவைகளுக்கு ஒப்பாயிருந்தன?

பாம்புகள். வெளி 9:19

  1. காணவும் கேட்கவும் நடக்கவும் கூடாதவைகள் எவை?

விக்கிரகங்கள். வெளி 9:20

  1. பலமுள்ள தூதன் எங்கேயிருந்து இறங்கினான்?

வானம். வெளி 10:1

  1. பலமுள்ள தூதனைச் சூழ்ந்திருந்தது எது?

மேகம். வெளி 10:1

  1. பலமுள்ள தூதனின் முகம் எதைப்போலிருந்தது?

சூரியன். வெளி 10:1

  1. பலமுள்ள தூதனின் கால்கள் எதைப்போலிருந்தது?

அக்கினி ஸ்தம்பங்கள். வெளி 10:1

  1. பலமுள்ள தூதனின் கையில் இருந்தது என்ன?

திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம். வெளி 10:2

  1. சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தவன் யார்?

பலமுள்ள தூதன். வெளி 10:3

  1. ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே நிறைவேறுவது எது?

தேவரகசியம். வெளி 10:6

  1. யார் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்?

ஏழாம் தூதன். வெளி 10:6

  1. தேவன் யாருக்கு அறிவித்தபடி தேவரகசியம் நிறைவேறும்?

தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள். வெளி 10:6

  1. பலமுள்ள தூதனிடமிருந்து சிறு புஸ்தகத்தை வாங்கி புசித்தவர் யார்?

யோவான். வெளி 10:10

  1. சிறுபுஸ்தகம் யோவானின் வாய்க்கு எப்படியிருந்தது?

தேனைப் போல மதுரமாய். வெளி 10:10

  1. சிறுபுஸ்தகம் யோவானின் வயிற்றுக்கு எப்படியிருந்தது?

கசப்பாய். வெளி 10:10

  1. யோவானிடம் எதற்கு ஒப்பான அளவு கோல் கொடுக்கப்பட்டது?

கைக்கோல். வெளி 11:1

  1. ஆலயத்திற்கு புறம்பான பிரகாரம் யாருடையது?

புறஜாதியார். வெளி 11:2

  1. பரிசுத்தநகரத்தை மிதிப்பவர்கள் யார்?

புறஜாதியார். வெளி 11:2

  1. பரிசுத்தநகரத்தை புறஜாதியார் எத்தனை மாதம் மிதிப்பார்கள்?

42 மாதம். வெளி 11:2

  1. இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய் தீர்க்கதரிசனம் சொல்பவர்கள் யார்?

இரண்டு சாட்சிகள். வெளி 11:3

  1. இரண்டு சாட்சிகள் எத்தனை நாட்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்?

1260 நாட்கள். வெளி 11:4

  1. பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்கள் யார்?

இரண்டு சாட்சிகள். வெளி 11:4

  1. இரண்டு விளக்கு தண்டுகள் என்பது யாரைக் குறிக்கின்றது?

இரண்டு சாட்சிகள். வெளி 11:4

  1. இரண்டு சாட்சிகளின் வாயிலிருந்து புறப்பட்டு சத்துருக்களைப் பட்சிப்பது எது?

அக்கினி. வெளி 11:5

  1. மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்?

இரண்டு சாட்சிகள். வெளி 11:6

  1. தண்ணீரை இரத்தமாக மாற்ற அதிகாரம் பெற்றவர்கள் யார்?

இரண்டு சாட்சிகள். வெளி 11:6

  1. பூமியை சகலவித வாதைகளாலும் வாதிக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்?

இரண்டு சாட்சிகள். வெளி 11:6

  1. இரண்டு சாட்சிகளோடே யுத்தம் பண்ணுவது எது?

பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம். வெளி 11:7

  1. இரண்டு சாட்சிகளைப் கொன்று போடுவது எது?

பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம். வெளி 11:7

  1. மகா நகரத்தின் விசாலமான வீதியில் கிடப்பது எது?

இரண்டு சாட்சிகளின் உடல்கள். வெளி 11:8

  1. இரண்டு சாட்சிகளின் உடல்கள் கிடக்கும் இடம் எது?

சோதோம், எகிப்து. வெளி 11:8

  1. ஞானார்த்தமாய் சொல்லப்படும் நகரங்கள் எவை?

சோதோம், எகிப்து. வெளி 11:8

  1. நம்முடைய கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட இடம் எது?

சோதோம், எகிப்து. வெளி 11:8

  1. இரண்டு சாட்சிகளின் உடல்கள் எத்தனை நாள் வீதியில் கிடக்கும்?

3/2 நாள். வெளி 11:9

  1. யாருடைய உடல்களை கல்லறையில் வைக்கவொட்டார்கள்?

இரண்டு சாட்சிகள். வெளி 11:10

  1. பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினவர்கள் யார்?

இரண்டு சாட்சிகள். வெளி 11:10

  1. இரண்டு சாட்சிகளின் மரணத்தினிமித்தம் ஒருவருக்கொருவர் எதை அனுப்புவார்கள்?

வெகுமதிகள். வெளி 11:10

  1. மூன்றரை நாளுக்குப்பின் இரண்டு சாட்சிகளின் உடல்களில் பிரவேசித்தது எது?

ஜீவ ஆவி. வெளி 11:11

  1. சோதோம் நகரத்தில் எத்தனை பங்கு இடிந்து விழுந்தது?

பத்தில் ஒன்று. வெளி 11:13

  1. சோதோமில் பூமி யதிர்ச்சியினால் எத்தனை மனுஷர்கள் அழிந்தார்கள்?

7,000 பேர். வெளி 11:13

  1. ஏழாம் தூதன் எக்காளம் ஊதிய போது கர்த்தருக்கும் கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களானவை எவை?

உலகத்தின் ராஜ்யங்கள். வெளி 11:15

  1. தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த எவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்?

24 மூப்பர்கள். வெளி 11:16

  1. யார் நியாயத்தீர்ப்படைகிறதற்குக் காலம் வந்தது?

மரித்தோர். வெளி 11:18

  1. எவர்களுக்குப் பலனளிக்கிறதற்குக் காலம் வந்தது?

தேவனுடைய ஊழியக்காரர், பரிசுத்தவான்கள், பயபக்தியாயிருந்த சிறியோர், பெரியோர். வெளி 11:18

  1. தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது எது?

பரலோகத்தில். வெளி 11:19

  1. தேவனுடைய ஆலயத்தில் காணப்பட்டது எது?

உடன்படிக்கையின் பெட்டி. வெளி 11:19

  1. சூரியனை அணிந்திருந்தவள் யார்?

ஒரு ஸ்திரீ. வெளி 12:1

  1. ஸ்திரீயின் பாதங்களின் கீழே இருந்தது என்ன?

சந்திரன். வெளி 12:1

  1. ஸ்திரீயின் சிரசின் மேல் இருந்தது என்ன?

கிரீடம். வெளி 12:1

  1. ஸ்திரீயின் சிரசின் மேல் எத்தனை நட்சத்திரமுள்ள கிரீடம் இருந்தது?

12 வெளி 12:1

  1. பிரசவ வேதனை யடைந்தவள் யார்?

சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ. வெளி 12:2

  1. ஸ்திரீ பிரசவவேதனையடைந்து அலறியபோது வானத்தில் தோன்றிய வேறொரு அடையாளம் என்ன?

வலுசர்ப்பம். வெளி 12:3

  1. வலுசர்ப்பத்துக்கு எத்தனை தலைகள் இருந்தன?

7 தலைகள். வெளி 12:3

  1. வலுசர்ப்பத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தன?

பத்து. வெளி 12:3

  1. வலுசர்ப்பத்தின் தலையின் மேல் எத்தனை முடிகள் இருந்தன?

ஏழு. வெளி 12:3

  1. ஏழு தலைகளையுடைய வலுசர்ப்பத்தின் நிறம் என்ன?

சிவப்பு. வெளி 12:3

  1. வலுசர்ப்பத்தின் எப்பகுதி நட்சத்திரங்களை விழத்தள்ளியது?

வால். வெளி 12:4

  1. வலுசர்ப்பத்தினால் எத்தனை பங்கு நட்சத்திரங்கள் பூமியில் விழத்தள்ளப்பட்டது?

மூன்றில் ஒரு பங்கு. வெளி 12:4

  1. பிறந்த குழந்தையை பட்சித்து போடும் படி நின்றது எது?

வலுசர்ப்பம். வெளி 12:4

  1. ஸ்திரீயானவள் என்ன குழந்தையைப் பெற்றெடுத்தாள்?

ஆண் குழந்தை. வெளி 12:5

  1. தேவனிடத்திற்கும் சிங்காசனத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது எது?

ஆண் குழந்தை. வெளி 12:5

  1. ஸ்திரீயானவள் எங்கே ஓடிப்போனாள்?

வனாந்தரம். வெளி 12:6

  1. வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டவள் யார்?

சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ. வெளி 12:6

  1. ஸ்திரீயானவள் எத்தனை நாள் வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டாள்?

1260 நாள். வெளி 12:6

  1. யுத்தம் உண்டானது எங்கே?

வானம். வெளி 12:7

  1. வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினவர்கள் யார்?

மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும். வெளி 12:7

  1. உலகமனத்தையும் மோசம்போக்குகிறது யார்?

சாத்தான். வெளி 12:9

  1. பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டது எது?

வலுசர்ப்பம். வெளி 12:9

  1. பழைய பாம்பு என்று அழைக்கப்பட்டது எது?

வலுசர்ப்பம். வெளி 12:9

  1. பூமியிலே விழத்தள்ளப்பட்டது எது?

வலுசர்ப்பம். வெளி 12:9

  1. வலுசர்ப்பத்தோடே பூமியிலே விழத்தள்ளப்பட்டவர்கள் யார்?

அதைச் சேர்ந்த தூதர். வெளி 12:9

  1. எவைகள் உண்டாயிருக்கிறது என்று வானத்திலுண்டான சத்தம் கூறியது?

இரட்சிப்பு, வல்லமை, தேவனுடைய ராஜ்யம், கிறிஸ்துவின் அதிகாரம். வெளி 12:10

  1. யார் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழ்த்தப்பட்டுப் போனான்?

சகோதரர். வெளி 12:10

  1. சகோதரர் மரணத்துக்குத் தப்பும் படி எவைகளினால் பிசாசை ஜெயித்தார்கள்?

ஆட்டுக்குட்டியின் இரத்தம், தங்கள் சாட்சியின் வசனம். வெளி 12:11

  1. யாருக்குக் கொஞ்ச காலம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது?

பிசாசானவன். வெளி 12:12

  1. ஆண்பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தியது எது?

வலுசர்ப்பம். வெளி 12:13

  1. பெருங்கழுகின் சிறகுகள் யாருக்குக் கொடுக்கப்பட்டது?

ஸ்திரீ. வெளி 12:14

  1. வலுசர்ப்பத்திற்கு விலகி வனாந்தரத்திற்குச் சென்றவள் யார்?

ஸ்திரீ. வெளி 12:14

  1. ஸ்திரீயானவள் எத்தனை காலங்கள் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திற்குப் போனாள்?

ஒரு காலம், காலங்கள், அரைகாலம். வெளி 12:14

  1. ஸ்திரீயை வெள்ளத்தால் அழிக்கும் படி முயற்சித்தது எது?

வலுசர்ப்பம். வெளி 12:15

  1. ஸ்திரீயின் மேல் கோபங்கொண்டது எது?

வலுசர்ப்பம். வெளி 12:17

  1. ஸ்திரீயின் சந்ததியாரோடு யுத்தம் பண்ணச் சென்றது எது ?

வலுசர்ப்பம். வெளி 12:17

  1. ஸ்திரீயின் சந்ததியார் எதைக் கைக்கொண்டார்கள்?

தேவனுடைய கற்பனைகள். வெளி 12:17

  1. ஸ்திரீயின் சந்ததியார் யாரைக் குறித்த சாட்சியை உடையவர்கள்?

இயேசு கிறிஸ்து. வெளி 12:17

  1. கடற்கரை மணலின் மேல் நின்று கொண்டிருந்தவர் யார்?

யோவான். வெளி 13:1

  1. சமுத்திரத்திலிருந்து எழும்பிவருவதாக யோவான் கண்டது என்ன?

மிருகம். வெளி 13:1

  1. சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு எத்தனை தலைகள் இருந்தன?

ஏழு. வெளி 13:1

  1. சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு எத்தனை கொம்புகள் இருந்தன?

பத்து. வெளி 13:1

  1. சமுத்திரத்து கொம்புகள் மேல் இருந்தது என்ன?

10 முடிகள். வெளி 13:1

  1. சமுத்திரத்து மிருகத்தின் தலைகளின் மேல் இருந்தது என்ன?

தூஷணமான நாமம். வெளி 13:1

  1. சமுத்திரத்து மிருகம் எந்த மிருகத்தை போலிருந்தது?

சிறுத்தை. வெளி 13:2

  1. சமுத்திரத்து மிருகத்தின் கால்கள் எதைப்போலிருந்தன?

கரடியின் கால்கள். வெளி 13:2

  1. சிங்கத்தின் வாயை உடைய மிருகம் எது?

சமுத்திரத்து மிருகம். வெளி 13:2

  1. சமுத்திரத்து மிருகத்துக்கு தன் சிங்காசனத்தைக் கொடுத்தது எது?

வலுசர்ப்பம். வெளி 13:2

  1. தன் பலத்தையும் அதிகாரத்தையும் வலுசர்ப்பம் எதற்குக் கொடுத்தது?

சமுத்திரத்து மிருகம். வெளி 13:2

  1. எதினுடைய தலைகளிலொன்று சாவுக்கேதுவான காயமுண்டாயிருந்தது?

சமுத்திரத்து மிருகம். வெளி 13:3

  1. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே எதைப் பின்பற்றினார்கள்?

சமுத்திரத்து மிருகம். வெளி 13:3

  1. பூமியிலுள்ள ஜனங்கள் எவைகளை வணங்கினார்கள்?

வலுசர்ப்பம், சமுத்திரத்து மிருகம். வெளி 13:4

  1. சமுத்திரத்து மிருகத்துக்கு எவைகளை பேசும் வாய் கொடுக்கப்பட்டது?

பெருமையானவைகள், தூஷணங்கள். வெளி 13:5

  1. சமுத்திரத்து மிருகத்துக்கு எத்தனை மாதம் யுத்தம் பண்ண அதிகாரம் கொடுக்கப்பட்டது?

42 மாதம். வெளி 13:5

  1. சமுத்திரத்து மிருகம் யாரை தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்தது?

தேவனை. வெளி 13:6

  1. தேவனுடைய நாமத்தையும் அவருடைய வாசஸ்தலத்தையும் தூஷித்தது எது?

சமுத்திரத்து மிருகம்

  1. சமுத்திரத்து மிருகம் எங்கே வாசமாயிருக்கிறவர்களைத் தூஷித்தது?

பரலோகத்தில். வெளி 13:6

  1. சமுத்திரத்து மிருகத்துக்கு எவர்களை ஜெயிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது?

பரிசுத்தவான்கள். வெளி 13:7

  1. எதில் பேரெழுதப்படாதவர்கள் சமுத்திரத்து மிருகத்தை வணங்குவார்கள்?

ஜீவபுஸ்தகம். வெளி 13:8

  1. எதுமுதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்படாதவர்கள் சமுத்திரத்து மிருகத்தை வணங்குவார்கள்?

உலகத்தோற்றம். வெளி 13:8

  1. பட்டயத்தினாலே கொல்லுகிறவன் எதினாலே கொல்லப்பட வேண்டும்?

பட்டயம். வெளி 13:10

  1. யாருடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது?

பரிசுத்தவான்கள். வெளி 13:10

  1. வெறொரு மிருகம் எங்கேயிருந்து எழும்பினது?

பூமி. வெளி 13:11

  1. பூமியிலிருந்து எழும்பின மிருகத்திற்கு எத்தனை கொம்புகளிருந்தன?

இரண்டு. வெளி 13:11

  1. பூமியிலிருந்தெழும்பின மிருகத்தின் கொம்புகள் எதற்கு ஒப்பாயிருந்தன?

ஆட்டுக்குட்டி. வெளி 13:11

  1. பூமியிலிருந்தெழும்பின மிருகம் எதைப்போல பேசியது?

வலுசர்ப்பம். வெளி 13:11

  1. சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்திருந்தது எது?

சமுத்திரத்து மிருகம். வெளி 13:12

  1. பட்டயத்தினாலே காயப்பட்டு பிழைத்தது எது?

சமுத்திரத்து மிருகம். வெளி 13:14

  1. எந்த மிருகத்தின் சொரூபம் பேசியது?

சமுத்திரத்து மிருகம். வெளி 13:15

  1. எந்த சொரூபத்தை வணங்காத யாவரும் கொலை செய்யப்படுவார்கள்?

சமுத்திரத்து மிருகம். வெளி 13:15

  1. எதினுடைய முத்திரையை தரித்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டது?

சமுத்திரத்து மிருகம். வெளி 13:17

  1. எதிலே ஞானம் விளங்குவதாக கூறப்படுகிறது?

மிருகத்தின் இலக்கம். வெளி 13:18

  1. மிருகத்தின் இலக்கத்தை எவன் கணக்கு பார்க்கக்கடவன்?

புத்தியுள்ளவன். வெளி 13:18

  1. மிருகத்தின் இலக்கம் யாருடைய இலக்கமாயிருக்கிறது?

மனுஷன். வெளி 13:18

  1. மிருகத்தின் இலக்கம் என்ன?

666 வெளி 13:18

  1. ஆட்டுக்குட்டியானவர் எந்த மலையில் நின்றதாக யோவான் கண்டார்?

சீயோன் மலை. வெளி 14:1

  1. பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்தவர்கள் எத்தனை பேர்?

1,44,000 பேர். வெளி 14:1

  1. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் எம்மலையில் நின்றிருந்தார்கள்?

சீயோன் மலை. வெளி 14:1

  1. பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்த இடம் எது?

நெற்றி. வெளி 14:1

  1. பிதாவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள் யாரோடே கூட நின்றார்கள்?

ஆட்டுக்குட்டியானவர். வெளி 14:1

  1. பெருவெள்ள இரைச்சல் போல சத்தம் எங்கேயிருந்து உண்டானது?

வானம். வெளி 14:2

  1. சிங்காசனத்திற்கு முன்பாக புதுப்பாட்டை பாடியவர்கள் யார்?

சுரமண்டலக்காரர். வெளி 14:3

  1. சுரமண்டலக்காரரின் பாடல் யார் மட்டும் கற்று கொள்ள கூடியதாயிருந்தது?

1,44,000 பேர். வெளி 14:3

  1. 1,44,000 பேர் எங்கேயிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்?

பூமி. வெளி 14:3

  1. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் யார்?

மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளி 14:4

  1. ஆட்டுக்குட்டியானவரை பின்பற்றியவர்கள் யார்?

மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளி 14:4

  1. மனுஷரினின்று முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் யார்?

1,44,000 பேர். வெளி 14:4

  1. மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் யாருக்கு முதற்பலனாக காணப்பட்டார்கள்?

தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும். வெளி 14:4

  1. மீட்டுக்கொள்ளப்பட்டவர்களின் வாயில் எது காணப்படவில்லை?

கபடம். வெளி 14:5

  1. எந்த மகாநகரம் விழுந்தது என்று தூதன் கூறினான்?

பாபிலோன். வெளி 14:8

  1. தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தவள் யார்?

பாபிலோன். வெளி 14:8

  1. தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்டது எது?

தேவனுடைய உக்கிரமாகிய மது. வெளி 14:10

  1. அக்கினியாலும் கந்தகத்தாலும் வாதிக்கப்படுபவர்கள் யார்?

மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள். வெளி 14:10

  1. எதின் சொரூபத்தை வணங்கினவர்களுக்கு இரவும் பகலும் இளைப்பாறுதல் இல்லாமற் போகும்?

மிருகம். வெளி 14:11

  1. தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்கிறவர்கள் யார்?

பரிசுத்தவான்கள். வெளி 14:12

  1. பரிசுத்தவான்கள் கடைபிடிக்கும் முக்கிய செல்வம் எது?

பொறுமை. வெளி 14:12

  1. கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் எதைவிட்டொழிந்து இளைப்பாறுவார்கள்?

தங்கள் பிரயாசங்கள். வெளி 14:13

  1. கர்த்தருக்குள் மரிக்கிறவர்களோடே கூடப்போவது என்ன?

கிரியைகள். வெளி 14:13

  1. ஆம் என்று திருவுளம் பற்றுகிறவர் யார்?

ஆவியானவர். வெளி 14:13

  1. மனுஷகுமாரனுக்கொப்பானவர் எதின் மேல் உட்கார்ந்திருந்தார்?

மேகம். வெளி 14:14

  1. மனுஷகுமாரனுக்கொப்பானவர் தமது சிரசின் மேல் எதை வைத்திருந்தார்?

பொற்கிரீடம். வெளி 14:14

  1. மனுஷகுமாரனுக்கொப்பானவர் கையில் வைத்திருந்தது என்ன?

கருக்குள்ள அரிவாள். வெளி 14:14

  1. எதின் பயிர் முதிர்ந்தது என்று தூதன் கூறினான்?

பூமி. வெளி 14:15

  1. கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருந்த தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்?

பரலோகத்திலுள்ள தேவாலயம். வெளி 14:1

  1. அக்கினியின் மேல் அதிகாரமுள்ள தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்?

பலிபீடம். வெளி 14:17

  1. கருக்குள்ள அரிவாளால் பூமியின் எப்பழங்கள் அறுக்கப்பட்டன?

திராட்சப்பழங்கள். வெளி 14:19

  1. திராட்சப்பழங்கள் தேவனுடைய எந்த ஆலையில் போடப்பட்டது?

கோபாக்கினை. வெளி 14:19

  1. தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலை எங்கே இருந்தது?

நகரத்திற்கு புறம்பே. வெளி 14:20

  1. நகரத்திற்கு புறம்பே உள்ள ஆலையில் மிதிக்கப்பட்டது என்ன?

திராட்சைப் பழங்கள். வெளி 14:20

  1. தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலையிலிருந்து புறப்பட்டு வந்தது என்ன?

இரத்தம். வெளி 14:20

  1. ஆலையிலிருந்து இரத்தம் எவ்வளவு தூரம் புறப்பட்டு சென்றது?

1600 ஸ்தாதி. வெளி 14:20

  1. குதிரைகளின் கடிவாளம் மட்டும் பெருகி வந்தது என்ன?

இரத்தம். வெளி 14:20

  1. எவைகளுடைய ஏழு தூதரை யோவான் வானத்திலே கண்டார்?

ஏழு வாதைகள். வெளி 15:1

 

வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 15 – 21 Quiz கேள்வி பதில்

  1. கண்ணாடிக்கடலில் கலந்திருந்தது என்ன?

அக்கினி. வெளி 15:2

  1. கண்ணாடிக்கடலருகே நின்றிருந்தவர்கள் யார்?

ஜெயங்கொண்டவர்கள். வெளி 15:2

  1. ஜெயங்கொண்டவர்கள் எதைப்பிடித்துக் கொண்டு கண்ணாடிக்கடலருகே நின்றார்கள்?

தேவசுரமண்டலங்கள். வெளி 15:2

  1. தேவனுடைய ஊழியக்காரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் யார்?

மோசே. வெளி 15:3

  1. ஜெயங்கொண்டவர்கள் எவர்களுடைய பாட்டைப் பாடுவார்கள்?

மோசே, ஆட்டுக்குட்டியானவர். வெளி 15:3

  1. எது வெளியரங்கமாயின?

தேவனுடைய நீதியான செயல்கள். வெளி 15:4

  1. பரலோகத்திலே காணப்படும் ஆலயம் என்பது எது?

சாட்சியின் கூடாரம். வெளி 15:5

  1. ஏழு வாதைகளுடைய ஏழு தூதர்கள் எங்கிருந்து புறப்பட்டார்கள்?

ஆலயம். வெளி 15:6

  1. சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம் தரித்திருந்தவர்கள் யார்?

ஏழு வாதைகளுடைய ஏழு தூதர்கள். வெளி 15:6

  1. தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்திருந்தவை எவை?

பொற்கலசங்கள். வெளி 15:7

  1. தேவனுடைய மகிமையினாலும் வல்லமையினாலுமா உண்டானது எது?

புகை. வெளி 15:8

  1. தேவனுடைய வல்லமையினால் உண்டான புகையால் நிறைந்தது எது?

தேவாலயம். வெளி 15:8

  1. தேவனுடைய கோபகலசங்களை உடைய தூதர்கள் எத்தனை பேர்?

ஏழு தூதர்கள். வெளி 16:1

  1. தேவனுடைய கோபகலசங்களை எங்கே ஊற்றும்படி தூதர்களிடம் கூறப்பட்டது?

பூமியின் மேல். வெளி 16:1

  1. முதலாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?

பூமி. வெளி 10:2

  1. முதலாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது?

பொல்லாத கொடிய புண். வெளி 16:2

  1. இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?

சமுத்திரம். வெளி 16:3

  1. இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்ற அது எதைப் போலாயிற்று?

செத்தவனுடைய இரத்தம். வெளி 16:3

  1. மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?

ஆறுகள், நீருற்றுகள். வெளி 16:4

  1. மூன்றாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது?

இரத்தம். வெளி 16:4

  1. இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் கூறியவன் யார்?

தண்ணீர்களின் தூதன். வெளி 16:5

  1. இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் கூறியவன் யார்?

தண்ணீர்களின் தூதன். வெளி 16:5

  1. மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் யாருடைய இரத்தத்தைச் சிந்தியவர்கள்?

பரிசுத்தவான்கள், தீர்க்கதரிசிகள். வெளி 26:6

  1. மிருகத்தை வணங்குகிறவர்களுக்கு தேவன் எதை குடிக்க கொடுத்தார்?

இரத்தம். வெளி 16:6

  1. சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்?

தேவனுடைய நியாயத்தீர்ப்புகள். வெளி 16:7

  1. நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?

சூரியன். வெளி 16:8

  1. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?

ஐபிராத் நதி. வெளி 16:12

  1. சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருபவர்கள் யார்?

ராஜாக்கள். வெளி 16:12

  1. யாருக்கு வழி ஆயத்தமாகும்படி ஐபிராத் நதியின் தண்ணீர் வற்றிப்போனது?

ராஜாக்கள். வெளி 16:12

  1. வலுசர்ப்பம் மிருகம் மற்றும் கள்ளத்தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து வந்தது என்ன?

அசுத்த ஆவிகள். வெளி 16:13

  1. மூன்று அசுத்த ஆவிகளும் எதற்கு ஒப்பாக காணப்பட்டது?

தவளைகள். வெளி 16:13

  1. பிசாசுகளின் ஆவிகள் எதைச் செய்தன?

அற்புதங்கள். வெளி 16:14

  1. சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடப்பது என்ன?

யுத்தம். வெளி 16:14

  1. பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைக் கூட்டிச் சேர்க்கும்படி சென்றது யார்?

பிசாசுகளின் ஆவிகள். வெளி16:14

  1. இதோ திருடனைப் போல் வருகிறேன் என்ற சத்தம் எங்கேயிருந்து உண்டானது?

தேவாலயம். வெளி 16 :1-15

  1. நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு எதைக் காத்து கொள்ள வேண்டும்?

வஸ்திரங்களை. வெளி 16:15

  1. பூமியின் ராஜாக்கள் எந்த இடத்திலே கூட்டி சேர்க்கப்பட்டார்கள்?

அர்மகெதோன். வெளி 16:16

  1. அர்மகெதோன் என்பது எந்த பாஷையில் அழைக்கப்பட்டுள்ளது?

எபிரெயு. வெளி 16:16

  1. ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?

ஆகாயம். வெளி 16:17

  1. ஏழாம் தூதன் கலசத்திலுள்ளதை ஊற்றியபோது பிறந்த பெருஞ்சத்தம் என்ன?

ஆயிற்று. வெளி 16:17

  1. ஆயிற்று என்கிற சத்தம் எங்கேயுள்ள சிங்காசனத்திலிருந்து பிறந்தது?

பரலோகத்தின் ஆலயம். வெளி 16;17

  1. எந்த தூதன் கலசத்தை ஊற்றியபோது சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது?

ஏழாம் தூதன். வெளி 16:18

  1. மகா நகரம் எத்தனை பங்காக பிரிக்கப்பட்டது?

மூன்று. வெளி 16:19

  1. தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

மகாபாபிலோன். வெளி 16:19

  1. ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் அகன்று போனவை எவை?

தீவுகள். வெளி 16:20

  1. ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் காணப்படாமல் போனவை எவை?

பர்வதங்கள். வெளி 16:20

  1. பெரிய கல்மழை எங்கேயிருந்து மனுஷர் மேல் விழுந்தது?

வானம். வெளி 16:21

  1. எதன் நிறையான கல்மழை வானத்திலிருந்து விழுந்தது?

தாலந்து. வெளி 16:20

  1. மகா கொடியதாயிருந்த வாதை எது?

ஏழாம் வாதை. வெளி 16:21

  1. திரளான தண்ணீர்கள் மேல் உட்காந்திருந்தவள் யார்?

மகா வேசி. வெளி 17:1

  1. மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினவர்கள் யார்?

பூமியின் ராஜாக்கள். வெளி 17:1

  1. ஆவிக்குள் வனாந்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டவர் யார்?

யோவான். வெளி 17:3

  1. யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை தலைகள் இருந்தன?

ஏழு. வெளி 17:3

  1. யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தன?

10 வெளி 17:3

  1. யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகம் எப்படிப்பட்ட நாமங்களால் நிறைந்தது?

தூஷணமான. வெளி 17:3

  1. தூஷணமான நாமங்களால் நிறைந்த மிருகத்தின் நிறம் என்ன?

சிவப்பு. வெளி 17:3

  1. ஏழு தலையும் பத்து கொம்புகளையும் உடைய மிருகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவள் யார்?

ஒரு ஸ்திரீ. வெளி 17:3

  1. இரத்தாம்பரமும் சிவப்புமான ஆடையைத் தரித்திருந்தவள் யார்?

மகா வேசி. வெளி 17:4

  1. பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களாலும் சிங்கரிக்கப்பட்டிருந்தவள் யார்?

மகா வேசி. வெளி 17:4

  1. மகா வேசி தன் கையால் எதை பிடித்திருந்தாள்?

பொற்பாத்திரம். வெளி 17:4

  1. மகா வேசியின் பொற்பாத்திரம் எதினால் நிறைந்திருந்தது?

வேசித்தனமாகிய அருவருப்புகளும், அசுத்தங்களும். வெளி 17:4

  1. இரகசியம் என்ற பதம் யாருடைய நெற்றியில் எழுதியிருந்தது?

மகா வேசி. வெளி 17:5

  1. மகா பாபிலோன் என்பது யாரைக் குறிக்கிறது?

மகா வேசி. வெளி 17:5

  1. வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் எது?

மகாபாபிலோன். வெளி 17:5

  1. மகாவேசியின் நெற்றியில் எத்தனை நாமங்கள் எழுதப்பட்டிருந்தன?

மூன்று. வெளி 17:5

  1. பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்ச்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருந்தவள் யார்?

மகா வேசி. வெளி 17:6

  1. மகா வேசியைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்?

யோவான். வெளி 17:6

  1. ஏன் ஆச்சரியப்படுகிறாய் யார் யாரிடம் கேட்டது?

தூதன் யோவானிடம். வெளி 17:7

  1. எவைகளின் இரகசியத்தை யோவானுக்குக் காண்பிப்பேன் என்று தூதன் கூறினான்?

ஸ்திரீ மற்றும் அவளைச் சுமக்கிற மிருகம். வெளி 17:7

  1. பாதாளத்திலிருந்து ஏறி வந்து நாசமடையப்போவது எது?

யோவான் கண்ட மிருகம். வெளி 17:7

  1. இருந்தும் இராமற்போனதும் இனி இருப்பதுமாயிருப்பது எது?

யோவான் கண்ட மிருகம். வெளி 17:8

  1. மிருகத்தின் இரகசியத்தில் விளங்குவது எது?

ஞானமுள்ள மனம். வெளி 17:9

  1. ஏழு தலைகளையுடைய மிருகத்தின் தலைகள் எதைக் குறிக்கின்றது?

ஏழு மலைகள். வெளி 17:9

  1. ஏழு மலைகளும் யார் உட்கார்ந்திருக்கிற மலைகளைக் குறிக்கிறது?

மகா வேசி. வெளி 17:9

  1. ஏழு மலைகள் என்பது யாரைக் குறிக்கிறது?

ஏழு ராஜாக்கள். வெளி 17:10

  1. ஏழு ராஜாக்களில் விழுந்தவர் எத்தனை பேர்?

ஐந்து. வெளி 17:10

  1. ஏழு ராஜாக்களில் இன்னும் வராதவர்கள் எத்தனை பேர்?

ஒருவன். வெளி 17:10

  1. கொஞ்சக்காலம் தரித்திருக்க வேண்டியவன் யார்?

இன்னும் வராத ஒரு ராஜா. வெளி 17:10

  1. எட்டாவதானாயிருப்பது எது?

இருந்ததும் இராததுமாகிய மிருகம். வெளி 17:11

  1. இருந்ததும் இராததுமாயிருக்கிற மிருகம் எதிலிருந்து தோன்றுகிறதாயிருக்கும்?

ஏழிலிருந்து. வெளி 17:11

  1. நாசமடைய போகிறவனாயிருப்பவன் யார்?

எட்டாவதான ராஜா. வெளி 17:11

  1. பத்து கொம்புகள் என்பது யாரைக் குறிக்கும்?

10 ராஜாக்கள். வெளி 17:12

  1. மிருகத்தின் கொம்புகள் குறிக்கும் ராஜாக்கள் இன்னும் பெறாதது எது?

இராஜ்யம். வெளி 17:12

  1. மிருகத்துடனே கூட ராஜாக்கள் போல் அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் யார்?

10 ராஜாக்கள். வெளி 17:13

  1. 10 ராஜாக்களும் எவ்வளவு நேரமளவும் அதிகாரம் பெற்றுக் கொள்ளுவார்கள்?

ஒருமணி நேரம். வெளி 17:12

  1. ஒரே யோசனையுள்ளவர்கள் யார்?

10 ராஜாக்கள். வெளி 17:13

  1. தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்துக்குக் கொடுப்பவர்கள் யார்?

10 ராஜாக்கள். வெளி 17:13

  1. பத்து ராஜாக்களும் யாருடனே யுத்தம் பண்ணுவார்கள்?

ஆட்டுக்குட்டியானவர். வெளி17:14

  1. 10 ராஜாக்களை யுத்தத்தில் ஜெயிப்பவர் யார்?

ஆட்டுக்குட்டியானவர். வெளி 17:14

  1. ஆட்டுக்குட்டியானவரோடே இருக்கிறவர்கள்எப்படிப்பட்டவர்கள்?

அழைக்கப்பட்டவர்களும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமானவர்கள். வெளி 17:14

  1. வேசி உட்கார்ந்திருந்த தண்ணீருக்கு ஒப்பிடப்பட்டவர்கள் யார்?

ஜனங்கள், கூட்டங்கள், ஜாதிகள், பாஷைக்காரர். வெளி 17:15

  1. பத்து ராஜாக்களும் யாரைப் பகைப்பார்கள்?

வேசி. வெளி 17:16

  1. வேசியைப் பாழும் நிர்வாணமுமாக்குபவர்கள் யார்?

பத்து ராஜாக்கள். வெளி 17:16

  1. பத்து ராஜாக்களும் வேசியினுடைய எதைப் பட்சிப்பார்கள்?

மாம்சத்தை. வெளி 17:16

  1. வேசியை நெருப்பினால் சுட்டெரிப்பவர்கள் யார்?

பத்து ராஜாக்கள். வெளி 17:16

  1. யார் தங்கள் இருதயத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கு கர்த்தர் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்?

பத்து ராஜாக்கள். வெளி 17:17

  1. பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம் யார்?

மகா வேசி. வெளி 17:18

  1. வெறொரு தூதன் எதை உடையவனாய் வானத்திலிருந்து இறங்கி வந்தான்?

மிகுந்த அதிகாரம். வெளி 18:1

  1. மிகுந்த அதிகாரமுடைய தூதனால் பிரகாசமானது எது?

பூமி. வெளி 18:1

  1. எந்த நகரம் விழுந்தது விழுந்தது என்று தூதன் சத்தமிட்டான்?

மகா பாபிலோன். வெளி 18:2

  1. பேய்களுடைய குடியிருப்பு என்பது எது?

மகாபாபிலோன். வெளி 18:2

  1. அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளின் கூடு எது?

மகாபாபிலோன். வெளி 18:2

  1. மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினவர்கள் யார்?

பூமியின் ராஜாக்கள். வெளி 18:3

  1. மகா வேசியின் செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்?

பூமியின் வர்த்தகர். வெளி 18:3

  1. யாருடைய பாவம் வானபரியந்தம் எட்டியது?

மகா வேசி. வெளி 18:5

  1. யாருடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்?

மகா வேசி. வெளி 18:5

  1. தன்னை மகிமைப்படுத்தி செல்வச்செருக்காய் வாழ்ந்தவள் யார்?

மகா வேசி. வெளி 18:7

  1. நான் ரஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன் என்று எண்ணியவள் யார்?

மகா பாபிலோன். வெளி 18:7

  1. ஒரே நாழிகையில் சாவும் துக்கமும் பஞ்சமும் யாருக்கு வரும்?

மகா பாபிலோன். வெளி 18:8

  1. மகா பாபிலோன் வேகிறதினால் அழுது புலம்புவர்கள் யார்?

பூமியின் ராஜாக்கள். வெளி 18:9

  1. பூமியின் வர்த்தகர்கள் யாருக்காக அழுது புலம்புவார்கள்?

மகா பாபிலோன். வெளி 18:11-13

  1. தங்கள் சரக்குகளை இனி கொள்வாரில்லாதபடியால் அழுது புலம்புவர்கள் யார்?

பூமியின் வர்த்தகர்கள். வெளி 18:11-13

  1. எது இச்சித்த பழவர்க்கங்கள் அதை விட்டு நீங்கிப்போயின?

மகா பாபிலோனின் ஆத்துமா. வெளி 18:14

  1. ஒரே நாளிகையிலே யாருடைய அவ்வளவு ஐசுவரியமும் அழிந்து போனது?

மகாபாபிலோன். வெளி 18:16

  1. எவர்கள் தங்கள் தலைகளில் புழுதியைய் போட்டுக்கொண்டார்கள்?

மாலுமிகள். வெளி 18:19

  1. மகா பாபிலோனின் உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்?

சமுத்திரத்தில் கப்பல்களையுடைய அனைவரும். வெளி 18:19

  1. ஒரு நாழிகையிலே பாழாய்ப் போனவள் யார்?

மகா பாபிலோன். வெளி 18: 19

  1. மகா பாபிலோனுக்காக அழுது துக்கித்து ஓலமிடுபவர்கள் யார்?

மாலுமிகள், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள், கப்பலாட்கள் சமுத்திரத்தில் தொழில் செய்பவர்கள். வெளி 18:17-19

  1. பரலோகம் யாரைக் குறித்து களிகூரவேண்டும் என்று தூதன் கூறினான்?

மகா பாபிலோன். வெளி 18:20

  1. எந்த மகா நகரம் இனி ஒருபோதும் காணப்படாமற் போகும்?

மகா பாபிலோன். வெளி 18:21

  1. தூதன் பெரிய எந்திரகல்லையொத்ததை எங்கே எறிந்தான்?

சமுத்திரத்தில். வெளி 18:21

  1. எவர்களுடைய சத்தம் இனி மகாபாபிலோனில் கேட்கப்படுவதில்லை?

சுரமண்டலக்காரர், கீதவாத்தியக்காரர், நாகசுரக்காரர், எக்காளக்காரர். வெளி 18:22

  1. எந்தத் தொழிலாளியும் இனி யாரிடத்தில் காணப்படுவதில்லை?

மகா பாபிலோன். வெளி 18:22

  1. மகா பாபிலோனில் இனி பிரகாசியாமலிருப்பது எது?

விளக்கு வெளிச்சம். வெளி 18:23

  1. மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி எங்கே கேட்கப்படுவதில்லை?

மகா பாபிலோன். வெளி 18:23

  1. மகா பாபிலோனின் வர்த்தகர் எங்கே பெரியோர்களாயிருந்தார்கள்?

பூமியில். வெளி 18:23

  1. யாருடைய சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்கள்?

மகா பாபிலோன். வெளி 18:23

  1. தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது?

மகா பாபிலோன். வெளி 18:24

  1. பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது?

மகா பாபிலோன். வெளி 18:24

  1. எங்கே திரளான ஜனங்கள் இடுகிற ஆரவாரத்தை யோவான் கேட்டார்?

பரலோகம். வெளி 19:1

  1. பரலோகத்தில் திரளான கூட்டம் சத்தமிட்ட வார்த்தை எது?

அல்லேலூயா. வெளி 19:1

  1. இரட்சணியம், மகிமை, கனம், வல்லமை இவைகள் யாருக்குரியவைகள்?

தேவனாகிய கர்த்தர். வெளி 19:1

  1. சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்?

கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள். வெளி 19:1

  1. மகா வேசி தன் வேசித்தனத்தினால் எதைக் கெடுத்தாள்?

பூமியை. வெளி 19:2

  1. மகா வேசிக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தவர் யார்?

தேவனாகிய கர்த்தர். வெளி 19:2

  1. தேவனாகிய கர்த்தர் எதற்காக மகா வேசியினிடத்தில் பழிவாங்கினார்?

தம்முடைய ஊழியக்காரரின் இரத்தம். வெளி 19:2

  1. யாருடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்று ஜனக்கூட்டம் கூறினார்கள்?

மகா வேசி. வெளி 19:3

  1. வணக்கமாய் விழுந்து ஆமென் அல்லேலூயா என்று சொல்லி தேவனைத் தொழுதவர்கள் யார்?

24 மூப்பர்களும், 4 ஜீவன்கள்ளும். வெளி 19:4

  1. தேவனுடைய ஊழியக்காரரும் அவருக்கு பயப்படுகிறவர்களும் அவரைத் துதியுங்கள் என்ற சத்தம் உண்டான இடம் எது?

சிங்காசனம். வெளி 19:5

  1. யாருடைய கலியாணம் வந்தது?

ஆட்டுக்குட்டியானவர். வெளி 19: 7

  1. ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்துக்குத் தன்னை ஆயத்தம் பண்ணியவள் யார்?

ஆட்டுக்குட்டியானவரின் மனைவி. வெளி 19:7

  1. எங்கே திரளான ஜனங்கள் இடுகிற ஆரவாரத்தை யோவான் கேட்டார்?

பரலோகம். வெளி 19:1

  1. பரலோகத்தில் திரளான கூட்டம் சத்தமிட்டு வார்த்தை எது?

அல்லேலூயா. வெளி 19:1

  1. சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்?

கர்த்தருடைய நீயாயத்தீர்ப்புகள். வெளி 19:1

  1. மகா வேசி தன் வேசித்தனத்தினால் எதைக் கெடுத்தாள்?

பூமியை. வெளி 19:2

  1. மகாவேசிக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்தவர் யார்?

தேவனாகிய கர்த்தர். வெளி 19:2

  1. தேவனாகிய கர்த்தர் எதற்காக மகா வேசியினிடத்தில் பழிவாங்கினார்?

தம்முடைய ஊழியக்காரரின் இரத்தம். வெளி 19:2

  1. யாருடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்று ஜனக்கூட்டம் கூறினார் கள்?

மகா வேசி. வெளி 19:3

  1. வணக்கமாய் விழுந்து ஆமேன் அல்லேலூயா என்று சொல்லி தேவனைத் தொழுதவர்கள் யார்?

24 மூப்பர்களும், 4ஜீவன்களும். வெளி 19:4

  1. தேவனுடைய ஊழியக்காரரும் அவருக்கு பயப்படுகிறவர்களும் அவரைத் துதியுங்கள் என்ற சத்தம் உண்டான இடம் எது?

சிங்காசனம். வெளி 19:5

  1. யாருடைய கலியாணம் வந்தது?

ஆட்டுக்குட்டியானவர். வெளி 19:7

  1. ஆட்டுக்குட்டியானவரின்மனைவி தன்னை ஆயத்தம் பண்ணிக்கொள்ள கொடுக்கப்பட்டது என்ன?

சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம். வெளி 19:8

  1. ஆட்டுக்குட்டியானவரின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட வஸ்திரம் யாருடைய நீதிகள் என்றழைக்கப்படுகிறது?

பரிசுத்தவான்கள். வெளி 19:8

  1. ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?

பாக்கியவான்கள். வெளி 19:8

  1. தேவதூதனை வணங்கும் படி அவன் பாதத்தில் விழுந்தவர் யார்?

யோவான். வெளி 19:10

  1. தன்னை ஓர் ஊழியக்காரனாக யோவானிடம் கூறியவன் யார்?

தேவதூதன். வெளி 19:10

  1. தன் காலில் விழுவதைத் தடுத்து தேவனைத் தொழுது கொள் என்று யோவானிடம் கூறியவன் யார்?

தேவதூதன். வெளி 19:10

  1. இயேசுவைப் பற்றின சாட்சி எதின் ஆவியாயிருக்கிறது?

தீர்க்கதரிசனம். வெளி 19:10

  1. பரலோகம் திறந்திருக்கையில் காணப்பட்டது என்ன?

வெள்ளைக் குதிரை. வெளி 19:11

  1. உண்மையும் சத்தியமுமுள்ளவர் எக்குதிரையின் மேல் ஏறியிருந்தார்?

வெள்ளைக் குதிரை. வெளி 19:11

  1. நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறவர் யார்?

வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவர். வெளி 19:11

  1. வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவரின் கண்கள் எதைப்போலிருந்தன?

அக்கினி ஜீவாலை. வெளி 19:12

  1. வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவரின் சிரசின் மேல் இருந்தது என்ன?

அநேக கிரீடங்கள். வெளி 19:12

  1. தமக்கேயன்றி வெறொருவருக்கும் தெரியாத நாமம் யாருடைய சிரசின் மேல் எழுதியிருந்தன?

வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவர். வெளி 19:12

  1. தேவனுடைய வார்த்தையானவர் எதில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்?

இரத்தம். வெளி 19:13

  1. வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்த வரின் நாமம் எது?

தேவனுடைய வார்த்தை. வெளி 19:13

  1. வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்திருந்தவர்கள் யார்?

பரலோகத்திலுள்ள சேனைகள். வெளி 19:14

  1. தேவனுடைய வார்த்தையானவரை தொடர்ந்து பின் சென்றவர்கள் யார்?

பரலோகத்தின் சேனைகள். வெளி 19;14

  1. தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து புறப்பட்டது எது?

கூர்மையான பட்டயம். வெளி 19:15

  1. யாரை வெட்டும்படி தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து பட்டயம் புறப்பட்டது?

புறஜாதிகள். வெளி 19:15

  1. இருப்புக்கோலால் புறஜாதிகளை அரசாளுபவர் யார்?

தேவனுடைய வார்த்தையானவர். வெளி 19:15

  1. சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிப்பவர் யார்?

தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:15

  1. ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடைய வகைகள்?

தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:16

  1. ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடைய வஸ்திரத்தின் மேலும் தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது?

தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:16

  1. சூரியனில் நின்று கொண்டிருந்தவன் யார்?

தூதன். வெளி 19:17

  1. சூரியனில் நின்று கொண்டிருந்த தூதன் எவைகளை சத்தமிட்டு அழைத்தான்?

பறவைகள். வெளி 19:17

  1. மகா தேவன் கொடுக்கும் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?

பறவைகள். வெளி 19;17-18

  1. மிருகமும் பூமியின் ராஜாக்களும் யாரோடே யுத்தம் பண்ண கூடி வந்தார்கள்?

தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:19

  1. யுத்தத்தில் பிடிக்கப்பட்டது எது?

மிருகம். வெளி 19:20

  1. மிருகத்தோடு கூட பிடிக்கப்பட்டவன் யார்?

கள்ளத்தீர்க்கதரிசி. வெளி 19:20

  1. கள்ளத்தீர்க்கதரிசி எவர்களை மோசம் போக்கினான்?

மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் சொரூபத்தை வணங்கினவர்கள். வெளி 19:20

  1. அக்கினி கடலில் எரிந்தது என்ன?

கந்தகம். வெளி 19:20

  1. கந்தகம் எரிகிற அக்கினி கட்டிலில் தள்ளப்பட்டவர்கள் யார்?

மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும். வெளி 19:20

  1. குதிரையின் மேல் ஏறினவரின் வாயிலிருந்து புறப்பட்ட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களின் மாம்சத்தினால் திருப்தியடைந்தவை எவை?

பறவைகள். வெளி 19:21

  1. வானத்திலிருந்து இறங்கி வந்த தூதனின் கையில் எதின் திறவுகோல் இருந்தது?

பாதாளம். வெளி 20:1

  1. பெரிய சங்கிலியை கையிலே பிடித்திருந்தவன் யார்?

வானத்திலிருந்திறங்கி வந்த தூதன். வெளி 20:1

  1. பாதாளத்தின் திறவுகோலை உடைய தூதன் எதைப் பிடித்து பாதாளத்தில் அடைத்து வைத்தான்?

வலுசர்ப்பம். வெளி 20:2

  1. வலுசர்ப்பமானது எத்தனை வருடம் கட்டி வைக்கப் பட்டது?

1000 வருஷம். வெளி 20:2

  1. ஜனங்களை மோசம் போக்காத படிக்கு பாதாளத்திலே தள்ளப்பட்டது எது?

வலுசர்ப்பம். வெளி 20:2

  1. வலுசர்ப்பத்தை பாதாளத்தில் அடைத்து வைத்து அதின் மேல் தூதன் எதைப் போட்டான்?

முத்திரை. வெளி 20:2

  1. கொஞ்ச காலம் விடுதலையாக வேண்டுவது எது?

வலுசர்ப்பம். வெளி 20: 3

  1. இயேசுவிற்கு சாட்சியாய் வாழ்ந்தவர்கள் இயேசுவு டன் எத்தனை வருடங்கள் அரசாண்டார்கள்?

1000 வருடம். வெளி 20:4

  1. எவைகளினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்ட வர்கள் கிறிஸ்துவுடன் 1000வருஷம் அரசாண்டார்கள்?

இயேசுவைப் பற்றிய சாட்சி, தேவனுடைய வசனம். வெளி 20:4

  1. எதை வணங்காமலும் அதின் முத்திரையைத் தரித்து கொள்ளாமலும் இருந்தவர்கள் 1000வருஷம் அரசாண்டார்கள்?

மிருகமும் அதின் சொரூபமும். வெளி 20:4

  1. எதை நெற்றியிலும் கையிலும் தரிக்காதவர்கள்1000 வருஷம் அரசாண்டார்கள்?

மிருகமும் அதின் சொரூபமும். வெளி 20:4

  1. ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையாதவர்கள் யார்?

மரணமடைந்த மற்றவர்கள். வெளி 20:5

  1. எதற்குப் பங்குள்ளவன் பாக்யவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்?

முதலாம் உயிர்த்தெழுதல். வெளி 20:6

  1. முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்கள் மேல் அதிகாரம் பாராட்ட முடியாதது எது?

இரண்டாம் மரணம். வெளி 20:6

  1. தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருக்கிறவர்கள் யார்?

முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவன். வெளி 20:6

  1. ஆயிரம் வருட அரசாட்சி யின் முடிவில் விடுதலை பெறுபவன் யார்?

சாத்தான். வெளி 20:7

  1. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகள் யார்?

கோகு, மாகோகு. வெளி 20:8

  1. கோகையும் மாகோகையும் மோசம் போக்கு படிக்கு புறப்படுபவன் யார்?

சாத்தான். வெளி 20:8

  1. சாத்தான் எவர்களை யுத்தத்திற்கு கூட்டிக்கொள்ளும்படிக்கு புறப்படுவான்?

கோகையும் மாகோகையும். வெளி 20:8

  1. யாருடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்?

கோகு, மாகோகு. வெளி 20:8

  1. பூமியெங்கும் பரம்பினவர்கள் யார்?

கோகேகு, மாகோகு. வெளி 20:9

  1. கோகுவும் மாகோகுவும் எவைகளை வளைந்து கொண்டார்கள்?

பரிசுத்தவான்களுடைய பாளையம், பிரியமான நகரம். வெளி 20:9

  1. தேவனால் வானத்திலிருந்து எது இறங்கி கோகுவையும் மாகோகுவையும் பட்சித்து போட்டது?

அக்கினி. வெளி 20:9

  1. அக்கினியும் கந்தகமுமான கடலில் தள்ளப்படுபவன் யார்?

பிசாசானவன். வெளி 20:10

  1. வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின் மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டவர் யார்?

யோவான். வெளி 20:11

  1. வெள்ளைச் சிங்காசனத்தில் வீற்றிருந்தவருடைய சமுகத்திலிருந்து அகன்று போனவை எவை?

வானம், பூமி. வெளி 20:11

  1. எவைகளுக்கு இடம் காணப்படவில்லை?

வானம், பூமி. வெளி 20:11

  1. மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் யாருக முன்பாக நின்றார்கள்?

தேவனுக்கு முன்பாக. வெளி 20:12

  1. மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்டவை எவை?

புஸ்தகங்கள். வெளி 20:12

  1. மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்ட வேறொரு புஸ்தகம் எது?

ஜீவ புஸ்தகம். வெளி 20:12

  1. தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தவர்கள் யார்?

மரித்தோர். வெளி 20:12

  1. மரித்தோர் எவைகளில் எழுதப்பட்ட படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்?

தேவனுக்கு முன்பாகத் திறக்கப்பட்ட புஸ்தகங்கள். வெளி 20:12

  1. தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தவை எவை?

சமுத்திரம், மரணம், பாதாளம். வெளி 20:13

  1. மரணமும் பாதாளமும் எதிலே தள்ளப்பட்டன?

அக்கினிக்கடல். வெளி 20:14

  1. மரித்தோர் நியாயத்தீர்ப்படைவது எத்தனையாவது மரணம்?

இரண்டாம் மரணம். வெளி 20:13-14

  1. ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படாதவன் எங்கே தள்ளப்படுவான்?

அக்கினிக்கடல். வெளி 20:15

  1. புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டது யார்?

யோவான். வெளி 20:1

  1. முந்தின வானமும் முந்தின பூமியும் என்ன ஆனது?

ஒழிந்து போனது. வெளி 21:1

  1. புதிய வானமும் புதிய பூமியும் காணப்பட்ட போது இல்லாமற் போனது எது?

சமுத்திரம். வெளி 21:1

  1. பரலோகத்திலிருந்து இறங்கி வந்த பரிசுத்த நகரம் எது?

புதிய எருசலேம். வெளி 21:2

  1. புதிய எருசலேம் என்பது என்ன?

பரிசுத்த நகரம். வெளி 21:2

  1. தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருநதது எது?

புதிய எருசலேம். வெளி 21:2

  1. தேவனுடைய வாசஸ்தலம் எவர்களிடத்திலிருக்கிறது?

மனுஷர்களிடம். வெளி 21:3

  1. மனுஷர்களிடம் வாசமாயிருப்பவர் யார்?

தேவன். வெளி 21:3

  1. தேவன் யாருடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்?

மனுஷர்கள். வெளி 21:4

  1. மரணமும் துக்கமும் அலறுதலும் வருத்தமும் எங்கே இல்லை?

புதிய எருசலேம். வெளி 21:4

  1. முந்தினவைகள் என்ன ஆயின?

ஒழிந்து போயின. வெளி 21:4

  1. சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர் கூறியது என்ன?

நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். வெளி 21:5

  1. சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த வரின் வசனங்கள் எப்படிப்பட்டவைகள்?

சத்தியமும் உண்மையுமானவைகள். வெளி 21:5

  1. தாகமாயிருப்பவனுக்கு இலவசமாய் கிடைப்பது எது?

ஜீவத்தண்ணீர். வெளி 21:6

  1. எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்பவன் யார்?

ஜெயங்கொள்ளுகிறவன். வெளி 21:7

  1. தேவனுடைய பார்வையில் ஜெயங்கொள்ளுகிறவன் யார்?

அவருடைய குமாரன். வெளி 21:7

  1. இரண்டாம் மரணம் என்று கூறப்படட்டுள்ளது எது?

அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல். வெளி 21:8 .

  1. பெரிதும் உயரமுமான பர்வதத்தில் ஆவியில் கொண்டு போகப்பட்டவன் யார்?

யோவான். வெளி 21:10

  1. எருசலேமாகிய பரிசுத்த நகரம் எதைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வந்தது?

பரலோகம். வெளி 21:10

  1. தேவனுடைய மகிமையை அடைந்தது எது?

பரிசுத்த நகரம். வெளி 21:10

  1. ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி யார?

புதிய எருசலேம். வெளி 21:10

  1. புதிய எருசலேம் எவை களைப் போன்று பிரகாசமாயிருந்தது?

இரத்தினக்கல், வச்சிரக்கல். வெளி 21:11

  1. புதிய எருசலேமுக்கு எப்படிப்பட்ட மதில் இருந்தது?

பெரிதும் உயரமுமான. வெளி 21:12

  1. புதிய எருசலேம் நகரத்திற்கு எத்தனை வாசல்களிருந்தன?

12 வாசல்கள். வெளி 21:12

  1. புதிய எருசலேமின் வாசல்களின் அருகே இருந்தவர்கள் யார்?

12 தூதர்கள். வெளி 21:13

  1. புதிய எருசலேமின் பன்னிரண்டு வாசல்களிலேயும் யாருடைய நாமம் எழுதப்பட்டிருந்தது?

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார். வெளி 21:13

  1. நகரத்தின் மதிலுக்கு எத்தனை அஸ்திபாரக் கற்களிருந்தன?

12 வெளி 21:14

  1. அஸ்திபாரக் கற்கள் மேல் யாருடைய நாமங்கள் பதிந்திருந்தன?

ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள். வெளி 21:14

  1. யோவானோடே பேசினவன் அளக்கிறதற்காக எதைப் பிடித்திருந்தான்?

பொற்கோல். வெளி 21:15

  1. யோவானோடே பேசினவன் எவைகளை அளக்கிறதற்குப் பொற்கோலைப் பிடித்திருந்தான்?

நகரத்தையும் அதின் வாசல்களயும், மதில்களையும். வெளி 21:15

  1. எருசலேம் நகரம் எவ்வடிவத்திலிருந்தது?

சதுரம். வெளி 21:16

  1. எருசலேம் நகரத்தின் அளவு என்ன?

12;000 ஸ்தாதி. வெளி 21:16

  1. எருசலேம் நகரத்தின் மதிலின் அளவு என்ன?

144 முழம். வெளி 21:17

  1. எருசலேம் நகரத்தின் மதில் எதினால் கட்டப்பட்டிருந்தது?

வச்சிரக்கல். வெளி 21:18

  1. எருசலேம் நகரம் எப்படி இருந்தது?

சுத்தப்பொன்னாய். வெளி 21:18

  1. எருசலேம் நகரம் எதற்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது?

தெளிந்த பளிங்கு. வெளி 21:18

  1. நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் எவைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததன?

சகலவித இரத்தினங்கள். வெளி 21:19

  1. முதலாம் அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

வச்சிரக்கல். வெளி 21:19

  1. இரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

இந்திர நீலம். வெளி21:19

  1. மூன்றாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்ப்பட்டிருந்தது?

சந்திரகாந்தம். வெளி 21:19

  1. நான்காவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

மரகதம். வெளி 21:19

  1. ஐந்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

கோமேதகம். வெளி 21:20

  1. ஆறாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

பதுமராகம். வெளி 21:20

  1. ஏழாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

சுவர்ண ரத்தினம். வெளி 21:20

  1. எட்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

படிகப்பச்சை. வெளி 21:20

  1. ஒன்பதாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

புஷ்பராகம். வெளி 21:20

  1. பத்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

வைடூரியம். வெளி 21:20

  1. பதினோராவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

சுநீரம். வெளி 21:20

  1. பன்னிரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

சுகந்தி. வெளி 21:20

  1. நகரத்தின் பன்னிரண்டு வாசல்களும் எவைகளாயிருந்தன?

12 முத்துக்கள். வெளி 21:21

  1. தெளிவுள்ள பளிங்கு போல சுத்த பொன்னாயிருந்தது எது?

நகரத்தின் வீதி. வெளி 21:21

  1. புதிய எருசலேமின் ஆலயம் யார்?

கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவரும். வெளி 21:22

  1. நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்க எவைகள் இல்லை?

சூரியன், சந்திரன். வெளி 21:23

  1. நகரத்தை பிரகாசிப்பது எது?

தேவனுடைய மகிமை. வெளி 21:23

  1. நகரத்தின் விளக்கு யார்?

ஆட்டுக்குட்டியானவர். வெளி 21:23

  1. நகரத்தின் வெளிச்சத்தில் நடப்பவர்கள் யார்?

இரட்சிக்கப்படுகிற ஜனங்கள். வெளி 21:24

  1. தங்கள் மகிமையையும் கனத்தையும் நகரத்திற்குள்ளே கொண்டு வருபவர்கள் யார்?

பூமியின் ராஜாக்கள். வெளி 21:24

  1. இராக்காலம் இல்லாத இடம் எது?

புதிய எருசலேம் நகரம். வெளி 21:25

  1. எதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதில்லை?

புதிய எருசலேம். வெளி 21:25

  1. எவைகள் புதிய எருசலேமில் பிரவேசிப்பதில்லை?

தீட்டுள்ளதும், பொய்யையும் அருவருப்பையும் நடப்பிக்கிறவைகள். வெளி 21:27

  1. புதிய எருசலேம் நகரத்தில் பிரவேசிப்பவர்கள் யார்?

ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள். வெளி 21:27

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago