கிறிஸ்து கேட்கிறவர்களுக்குப் பிதா அருளும் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் தருகிறார் (லூக்கா 11: 13, மத்தேயு 3 :11, அப்போஸ்தலர் 2 : 32 33). பரலோகத்தில் பிதாவின் வலதுபாரிசத்தில் யாவரும் காணும்படியாக கிறிஸ்து வீற்றிருக்கிறார் (மாற்கு 16 : 19, ரோமர் 8 : 34, எபேசியர் 1 : 3, 8 : 1, 10 : 12, 12 : 2). நமக்காகப் பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் (ரோமர் 8: 34 எபிரேயர் 7 : 25, 1 யோவான் 2 :1 ,2). மக்களின் கண்களுக்குத் தெரியாதவாறு உலகமெங்கும் கிறிஸ்த பிரசன்னமாகியிருக்கிறார் (மத்தேயு 28 : 20) அவருடைய நாமத்தினால் மக்கள் கூடி வரும் இடங்களில் அவர்கள் நடுவிலிருக்கிறார். (மத்தேயு 18 : 20) அவரை ஏற்றுக் கொள்கிறவர்களின் இருதயங்களில் வாசமாயிருக்கிறார் (எபேசியர் 3 : 17).
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…