புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்றும் ஆண்டவரே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவை வேதம் தேவன் என்று அழைப்பதை ஏசாயா 9 : 6 , 7, யோவான் 1 : 1 -2, 20 : 28, யோவான் 5 : 20, அப்போஸ்தலர் 20 : 28 ரோமர் 9 : 5, தீத்து 2 : 13 எபிரேயர் 1 :8 – 9 என்ற பகுதிகளில் காணலாம். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டாரென்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதம் கூறும் தேவ பக்தியின் ரகசியங்களில் ஒன்றாகும் (1 தீமோத்தேயு 3 : 16 ). ஆவியானவரும் குமாரனே தேவன் என்று அழைத்தாரென்று எபிரேயர் 1 : 9 ல் காணலாம். இதனால் பிதா தேவனாயிருக்கிறார், குமாரன் தேவனாயிருக்கிறார், ஆவியானவரும் தேவனாயிருக்கிறார் (அபோஸ்தலர் 5 : 3, 4 , 2 கொரிந்தியர் 3 :17) “ என் தேவனே என் தேவனே” என்று இயேசு பிதாவை நோக்கிக் கூப்பிட்டபோது (மாற்கு 15 : 34) அவர் உலகத்தின் பாவங்களை சுமந்த நிலையில் (1 :29, 1 பேதுரு 2 : 24 ) நமக்காகப் பாவமாக்கப்பட்ட நிலையில் (2 கொரிந்தியர் 5 : 21) நம்முடைய பிரதிநிதியாக அவ்வாறு கூறினார். அவ்வாறு கூறுவதற்கு சற்று முன்பும் சற்று பின்பும் பிதாவே என்று அழைத்தார் (லூக்கா 23 : 34 – 46).
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…