இயேசு யார் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். இயேசு பிறப்பதற்கு முன்பா கவே பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதற்கு முன்னதாகவே, மனுஷரூபம் எடுப்பதற்கு முன்னதாகவே, பிரபஞ்சத்தின் படைப்பில் ஈடு பட்டவர் என்று யோவான் 1 : 3 லும்,கொலோசெயர் 1 : 16 லும், அறிகிறோம். பிதாவோடு உறவாடிக் கொண்டிருந்தவர் (யோவான் 17 : 23, 24). இயேசு பெத்லகேமில் பிறந்த பின் தேவனாக மாறிய ஒருவர் அல்ல. இவர் அநாதி தேவன். மனுஷனாக பரலோ கத்திலிருந்திறங்கி வந்த ஜீவ அப்பம். உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்து குமாரனாக இருந்தார் (சங்கீதம் 2 : 12,ஏசாயா 44 : 6, எபேசியர் 1 : 3, 4, யோவான் 17 : 24) சிருஷ்டிப்பின் தொடர்பிலும் இயேசு குமாரனென்று அழைக்கப்பட்டார் (எபிரேயர் 1 : 2).குமாரனை மனுஷ சாயலாக பிதா அனுப்பினார் (ரோமர் 8 : 23, ஏசாயா 9 : 6, யோவான் 3 : 16). அவர் தேவனின் ஒரே பேறானவராக வானத்திலி ருந்து அனுப்பப் பட்டார் (யோவான் 1 : 14, 3 : 6). இதை யோவான்ஸ்னானன்,
யோவான் 1: 15ல் “……எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் …..” என்றும்,
பேதுரு 1 பேதுரு 1 : 20 ல் “ அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப் பட்டவராயிருந்தார் ……” என்றும்,
பவுல் பிலிப்பியர் 2 : 6, 7ல் “ அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” என்றும்,
இயேசு யோவான் 3 : 13ல் “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத் திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.” என்றும்,
யோவான் 6 : 38ல் “ என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.” என்றும் யோவான் 8 : 58ல் “அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” என்றும்,
யோவான் 17 : 5ல் “ பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் …..”
என்றும் யோவான், பேதுரு, பவுல், இயேசு கூறியுள்ளதைப் பார்க்கிறோம்.
இயேசுகிறிஸ்துவுக்கு மத எல்லையோ. தேச எல்லையோ இல்லை. அனைவ ருக்கும் பொதுவான கதிரவனைப் போல உலகின் ஒரே இரட்சகர் (அப்போஸ்தலர் 4 : 12). இயேசு தந்தது மார்க்கம். உலக மக்கள் அனைவருக்குமான இரட்சிப்பின் மார்க்கம். அது தேவன் மனிதனாக வந்த மார்க்கம். தேவனுடைய ஆலோசனை யில் உதித்த மார்க்கம். மனிதரைப் பரலோகம் சேர்க்கும் வரை கரம்பிடிக்கும் மார்க்கம். உலகிற்காக உன்னதத்தில் தோன்றிய அருணோதயம் (லூக்கா 1 : 78, 79). இயேசுவே சத்தியம் (யோவான் 14 : 6). இயேசு அதரிசனமான தேவனுடைய தற்சொரூபம் (கொலோசெயர் 1 : 15). படைப்பின்காரணர் (கொலோசெயர் 1:16), வார்த்தையாக இருந்த தேவன் (யோவான் 1 : 1), வல்லமையுள்ள தேவன் (ஏசாயா 9 : 6), அனைத்தையும் நிலை நிறுத்துபவர் (கொலோசெயர் 1 : 17), சர்வத்திற்கும் மேலான தேவன் (ரோமர் 9 : 5), மெய்யான தேவன் (1யோவான் 5 : 20), மகாதேவன் (தீத்து 2 : 13), சபைக்குத் தலையானவர் (கொலோசெயர் 1 : 18), மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பவர் (கொலோசெயர்1 :27), ஞானம் அறிவு உடைய வர் (கொலோசெயர் 2 : 2, 3 ), நம்முடைய ஜீவனானவர் (கொலோசெயர் 3 : 4), உன்னதங்களில் வீற்றிருப்பவர் (கொலோசெயர் 3 :1), எல்லோரிலும் எல்லாமாக இருப்பவர் (கொலோசெயர் 3 : 11), தேவதூதரைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவர் (எபிரேயர் 1:4), ஆபிரகாமை விடப் பெரியவர் (யோவான் 8 : 58), தேவாலயத்தி லும் பெரியவர் (மத்தேயு 12 : 6), சாலொமோனிலும் பெரியவர் (மத்தேயு 12 : 42), யோனாவை விடப் பெரியவர் (மத்தேயு 12 : 41), நம்பிக்கைக்குரியவர் (எபிரேயர் 7 :19), விசேஷித்த உடன்படிக்கையின் பிணையாளி (எபிரேயர் 7 : 22), விசேஷித்த வாக்குத்தத்தங்களுக்குரியவர் (எபிரேயர் 8 : 6), விசேஷித்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தர் (எபிரேயர் 8 : 6), சகல அதிகாரம் உடையவர் (மத்தேயு 28 : 19), இயற்கையின் மேல் அதிகாரம் உடையவர் (லூக்கா 8 :25), நமது உயிரின் மேல் அதிகாரம் உடையவர் (யோவான் 10 : 8), ஜீவனைக் கொடுக்கும் அதிகாரம் உடையவர் (யோவான் 17 : 2), அற்புதம் செய்யும் அதிகாரம் உடையவர் (யோவான் 10 : 18), பாவ மன்னிப்பை கொடுக்கும் அதிகாரம் உடையவர் (மத்தேயு 9 : 6),இன்னும் கூறிக் கொண்டே போகலாம்.
இயேசுவின் பிறப்பு:
வானத்திலிருந்து இறங்கி வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் எடுத்த மனித அவதாரம் அதிசயமானது. இயேசு பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக,
ஏசாயா 9 : 6, “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” கூறினார்.
இது மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவிக்கின்றது. அவருடைய பிறப்பு சரித்திரத்தில் ஒரு திட்டவட்டமான காலத்தில், திட்ட வட்டமான இடத்தில் நடைபெறும் என்றும், அவர் ஒரு தனிப்பட்ட விதமாக அற்புதமான முறையில் பிறப்பார் என்றும் இப்பகுதி போதிக்கின்றது. மேசி யாவாக அவர் செயல்படுவதைக் காட்ட அவருக்கு நான்கு பெயர்களை ஏசாயா கொடுக்கின்றார். அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமானவர் ஆதலால் அவரை அதிசயமானவர் என்றும், அவர் இரட்சிப்பின் முழுமையான திட்டத்தை வெளிப்படுத்தும் ஆலோசனைக் கர்த்தர் என்றும், அவர் தெய்வத்தின் பரிபூரண மெல்லாம் சரீரத்தில் அடங்கியிருக்கும் வல்லமையுள்ள தேவன் என்றும், அவர் நித்திய நித்தியமாய் நம்மோடு கூட இருந்து, நமது தேவைகளைச் சந்திக்கும் மனதுருக்கமுள்ள, அன்பு செலுத்தும் நித்திய பிதாவாக நம்மோடு கூட இருப்பார் என்றும், பாவம் மரணம் இவற்றிலிருந்து உண்டாகும் விடுதலையை மனித இனத்துக்குக் கொடுத்து சமாதானத்தை உண்டு பண்ணுவதற்காக அவரை சமாதானப் பிரபு என்றும் ஏசாயா கூறியிருக்கிறார்.
ஏசாயா 11 : 1 “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.” என்று முன்னறிவித்தார்.
ஈசா என்பது தாவீதின் தகப்பனின் பெயர். அந்த ஈசாயின் அடிமரத்திலிருந்து துளிர்க்கின்ற கிளையாக இயேசுவானவர் இருப்பார் என்றும் அவரைக் குறித்து கூறப்பட்டுள்ளது. இவர் சமாதானம், நீதி, நன்மை இவற்றால் மீட்கப்பட்டு உலகை ஆளுவார். இந்த தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேறுதல் அவர் பிறந்தபோது நடைபெற்றது. அதன் முழு நிறைவேறுதல் அவரது இரண்டாம் வருகைக்காய்க் காத்திருக்கின்றது.
மரியாளிடம் தூதன் தோன்றியது:
மரியாள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து “கிருபை பெற்றவளே வாழ்க என்று வாழ்த்தி, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று ஆசீர்வதித்தவுடன் மரியாள் அவனைக் கண்டு கலங்கினாள். அப்பொழுது தேவதூதன் மரியாளை நோக்கி,
லூக்கா 1 : 31, 34, 35 “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். “
என்றான். தேவதூதன் சகரியாவின் குடும்பத்திற்கு யோவான் பிறப்பதாகச் செய்தி அறிவித்தது போல, மரியாளுக்கும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய செய்தியை அறிவித்தான்.அதற்கு மரியாள்தான் இன்னும் திருமணம் ஆகாததால், இது எப்படி ஆகும் என்று வினா எழுப்பினாள். தேவதூதன் மரியாளிடம் பரிசுத்த ஆவியானவர் அவள் மேல் வரும் என்றும், உன்னதமானவருடைய பலம் அவள் மேல் நிழலிடும் என்றும், அதனால் அவள் கர்ப்பவதியாகி குழந்தை பெறுவாள் என்றும், அவளிடம் பிறக்கும் குழந்தை பரிசுத்தமான தேவனுடைய குமாரன் எனப்படும் என்றும் கூறினான். உடனே மரியாள் தான் ஆண்டவருக்கு அடிமையென்றும், தேவனுடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது என்றும் கூறினாள். கன்னிப் பெண் ஒருத்திக்கு ஆணின் உதவியின்றி குழந்தை பெறுவாள் என்ற வாக்குத்தத்தமும், பிள்ளை இல்லாத பிள்ளை பெறத் தகுதியே இல்லாத மலடியான பெண்ணுக்கு நீ பிள்ளை பெறுவாய் என்ற வாக்குத்தத்தமும் மரியாளுக்கும், எலிசபெத்துக்கும் கொடுக்கப்பட்டது. இரண்டு பரிசுத்தமுள்ள பெண்களும் பரிசுத்தமுள்ள குழந்தைகளுக்குத் தாயானார்கள். எலிசபெத் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது மரியாள் முதல் மாத கர்ப்பிணியானாள். கர்த்தரு டைய வார்த்தையானது மரியாளுக்குள் கருத்தரிக்க ஆரம்பித்தது. இதை ஏற்கனவே ஏசாயா தீர்க்கதரிசி,
ஏசாயா 7 : 14ல் “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.”
என்று கூறியிருந்ததைப் பார்க்கிறோம். ஏசாயா ஆண்டவர் நமக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார். இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் அடையாளமென்று கூறப்படவில்லை. பிறப்பை மாத்திரமே அடையாளம் என்று கூறப்பட்டுள்ளது. சிலுவை மரணத்தை ஏன் அடையாளம் என்று சொல்லப்படவில்லை என்றால், ரோமாபுரியில் ஒவ்வொரு ஆண்டும் 2000 பேர் சிலுவையில் அறையப்படுவர். இயேசு அதில் ஒன்றாக ஆகிவிடும். ஆனால் கன்னியில் வயிற்றில் பிறந்தது தான் அடையாளம். ஆணின் உதவி இல்லாமல் பிறந்ததுதான் அடையாளம். ஆவியானவர் மரியாளின் மீது வந்து இயேசுவைப் பிறப்பித்தது போலவே, நம்மில் கிறிஸ்து உருவாகும்படி ஆவியானவர் நம்மிடம் வருகிறார். மரியாளின் கர்ப்பத்தில் ஒரு சரீரம் உருவாவதற்கு சில மாதங்கள் ஆனது போல, கிறிஸ்து நம் ஜீவியத்தில் உருவாகி வெளிப்பட சில காலங்கள் ஆகும். நம்முடைய பாவங்களுக்காகப் பாவ நிவர்த்தி செய்யப்பட்டு இரட்சிப்பைப் பெற இயேசுவானவர் மானிட உருவில் வெளிப்பட வேண்டும். பாவமற்றவராக இருக்க வேண்டும். முற்றிலும் தெய்வத்தன்மை உள் ளவராயும் இருக்கவேண்டும் (எபிரேயர் 7 : 25, 26). இயேசு ஒரு கன்னிகையிடம் பிறந்தது இந்த மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகத்தான்.
இயேசு கிறிஸ்து ஒரு மானிடனாக அவதரிக்க வேண்டுமானால் 1. அவர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பிறக்க வேண்டும். 2. அவர் முற்றிலும் பரிசுத்தமு ள்ளவராக இருக்க வேண்டுமானால் அவர் பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாகி, தேவன் அவருடைய பிதாவாக இருக்க வேண்டும். அதன் பலனாக அவருடைய கருவுறுவதாலானது இயற்கையான முறையில் நடக்கவில்லை.. ஆனால் இயற்கை சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக முறையில் நடந்தது. மரியாள் வயிற்றில் பிறக்கப்போகும் பரிசுத்தமுள்ள குழந்தை தேவகுமாரன் என்று அழைக்கப்பட்டார் (லூக்கா 1 : 35). தூதன் மரியாளுக்கு எலிசபெத் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்தியை அறிவித்ததும் (லூக்கா 1 : 36), நாசரேத்திலிருந்து மரியாள் 130 கிலோ மீட்டர் பயணம் பண்ணி யூதேயாவிலிருந்த எலிசபெத்தைப் பார்க்கச் சென்று அவளை வாழ்த்தினாள். அப்போது அவள் வயிற்றில் உள்ள பிள்ளை துள்ளியது. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்களுடைய வார்த்தைகள் கர்ப்பத்திலிருக்கும் சிசுவைக் கூடத் துள்ள வைக்கும் வல்லமை கொண்டவைகள் என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
மரியாள் மூன்று மாதம் எலிசபெத்துடன் தங்கி அதன் பின் திரும்பிச் சென்றாள் மரியாளுடைய தாழ்மையைத் தேவன் நோக்கிப் பார்த்தார். நாசரேத்தில் உள்ள மக்களுக்குத் தான் கர்ப்பமானதை அறிந்தால் புறங்கூறுவார்கள் என்றும், அந்தச் செயல் பரிசுத்தாவியின் கிரியை என்பதை ஒருவர் கூட விசுவாசிக்க மாட்டார்கள் என்பதையும் மரியாள் நன்கு அறிந்திருந்தாள். ஆனாலும் அந்த நிந்தைகளைச் சகித்திட மரியாள் மனமுவந்து தன்னை ஒப்புக்கொடுத்தாள். இதனால் எவ்வளவோ நிந்தைகளும், அவமானங்களும் அடைந்திருப்பாள். ஏனெனில் யூதா தன்னுடைய மருமகள் கணவன் இல்லாமல் கர்ப்பம் தரித்தாள் என்று அறிந்ததால் ஆதியாகமம் 38 : 24 ல் அவள் சுட்டெரிக்கப் பட வேண்டும் என்றான். இதுதான் அன்றைய சட்டம். ஆனால் பத்து மாதங்கள் மரியாளின் வயிற்றில் இயேசு இருந்தார்.
தூதனும், யோசேப்பும்:
இயேசுகிறிஸ்துவினுடைய தாயாராகிய மரியாள் யோசேப்பை விவாகம் செய்வதற்கு நியமிக்கப்பட்டிருகையில் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதி யானாள். மரியாள் திடீரென்று எலிசபெத்தைப் பார்க்கப் போய்விட்டுத் திரும்பி வந்தவள் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டவுடன் யோசேப்புக்குக் கலக்கம் ஏற்பட்டது. யோசேப்பு அவளுடைய கர்ப்பத்தில் வளர்வது தேவனுடைய அதிசயமான செயல் என்பதை உணரவில்லை. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நிச்சயமாய் விபச்சாரி என்று சொல்லி அவளைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள். ஆனால் அவன் நீதிமானாய் இருந்தபடியால் மரியாளை நிந்தனை செய்யாமல் அவளை இரகசியமாகத் தள்ளி விட விரும்பினான் (மத்தேயு 1 : 19). புதிய ஏற்பாட்டில் முதல் நீதிமானாக அழைக்கப்பட்டது இந்த யோசேப்பைத்தான். அவன் மரியாளின் பாவத்தை மறைத்து, அந்த நபரை நிந்தனை செய்யக்கூடாது என்ற மனப்பாங்குடன் இருந்தவன். மரியாளை அவன் ஒருபோதும் தூற்றித் திரியவில்லை. யோசேப்பு மரியாளைத் தள்ளிவிட சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் தன்னுடைய திருமண வாழ்வில் எந்த விதமான களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அஞ்சினான். அவ்வாறு அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குத் தோன்றி,
மத்தேயு 1 : 20 – 23 “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவி யாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான்.”
யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்தவுடன் தேவதூதன் தனக்குச் சொன்னபடியே மரியாளைச் சேர்த்துக் கொண்டு, அவள் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்தான். தேவதூதன் கூறின வார்த்தையின்படி யோசேப்பு பாரம்பரியத்தையும், சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையும், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதையும் நினைக்காமல் மரியாளைச் சேர்த்துக் கொண்டதைப் பார்க்கிறோம். மத்தேயு 1 : 21 ல் யோசேப்பு பெயரிட வேண்டும் என்றும், லூக்கா 1 :31 ல் மரியாள் பெயரிட வேண்டும் என்றும் தேவதூதன் கூறியிருப்பதைப் பார்க்கிறோம் இரண்டு பேருமே இயேசு என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்பதற்காகத் தூதன் இரண்டு பேரிடமும் கூறினான். இயேசு என்ற பெயர் ஒரு சாதாரண யூதப் பெயர். இயேசு என்பது கிரேக்க வார்த்தை. இயேசு என்பதும் யோசுவா என்பதும் ஒன்றுதான். இயேசு என்றால் இரட்சகர் என்று பொருள். இயேசு பாவத்திலிருந்து இரட்சிக்கும் பணியை பிரதானமாய்ச் செய்கிறார். அத்துடன் பிசாசின் பிடியிலிருந்தும், வியாதியின் கொடுமையிலி ருந்தும் மக்களை இரட்சிக்கிறார். இயேசு நம்முடைய பாவங்களை மன்னிப்பார் என்பது மட்டுமல்ல, பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பார் என்பதுமாகும். அதாவது பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை நீங்கலாக்கி இரட்சிப்பார் என்பதாகும்.
உலகத்தில் எந்த மதத்திலும் இந்த அர்த்தமுள்ள நாமம் சூட்டப்பட்ட தலைவர்கள் ஒருவரும் இல்லை. கடவுள் இரட்சிக்கா விட்டால் மனிதன் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது. இதைப் பவுல்,
எபேசியர் 2 : 5, 8 “அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப் பட்டீர்கள். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;”
என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். மேலும் மத்தேயு 1 : 23 ல் இமானுவேல் என்று இன்னும் ஒரு பெயரையும் யோசேப்பிடம் தூதன் கூறியிருப்பதைக் காண்கிறோம். இது ஏசாயா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுத லாகும் (ஏசாயா 7 :14). இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று பொருள். மத்தேயு முதல் அதிகாரத்தில் இமானுவேலைராய் நம்மோடிருக்கும் தெய்வம், மத்தேயு கடைசி அதிகாரத்தில் இயேசுவாகவே உலகத்தின் முடிவு வரை நம்மோடு கூட இருக்கிறார். துவக்கம் முதல் முடிவு வரை அவர் கூட இருப்பது நாம் பெற்ற பெரும் பாக்கியமாகும். அதேபோல் கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு எபிரேயச் சொல் மேசியாவாகும். இச்சொல்லின் பொருள் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும்.
பெத்லகேமில் இயேசு:
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும் என்ற சட்டத்தைக் கர்த்தர் ரோமாபுரி அரசு மூலமாகக் கொண்டுவரச் செய்தார். ஜனங்கள் எல்லோரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பு தாவீதின் வம்சத்தானாக இருந்தபடியால் தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டு, கர்ப்பவதியான மரியாளுடன் குடிமதிப்பு எழுதும்படி நாசரேத்து ஊரிலிருந்து, யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்கு 100 கிலோ மீட்டர் கழுதையின் மேல் பயணம் பண்ணிச் சென்றனர். அப்பொழுது மரியாளுக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டதால், சத்திரத்துக்கு அழைத்துச் சென்றான். ஆனால் அந்தச் சத்திரத்தில் இடம் இல்லாதபடியினால் குழந்தை பிறந்தவுடன் குழந்தையைத் துணிகளில் சுற்றி அங்குள்ள மாட்டுத் தொழுவத்தின் முன்னணையிலே கிடத்தினாள். தன்னுடைய மகன் ஒரு ஏழையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்து முன்னணையில் கிடத்தப்பட வேண்டும் என்பதுதான் பிதாவின் விருப்பம். சரித்திரத்தில் ஒரு மனிதன் கூட மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததாக இல்லை.
மேய்ப்பர்கள்: (லூக்கா 2 : 8 – 14)
இயேசு பிறந்த இந்த நற்செய்தியை அரச மாளிகையில் இருப்பவர்களுக்கோ, வேதபாரகர்களுக்கோ, சதுசேயர்களுக்கோ, முதலில் அறிவிக்கப்படாமல், மந்தை மேய்த்துக் கொண்டிருந்த சாதாரணமான மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அந்த நாட்டில் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, தங்களுடைய மந்தையை ஓநாய்களுக்குப் பயந்து இரவு காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் கர்த்தருடைய தூதன் அவர்களுக்கு முன் வந்து நின்றான். அப்பொழுது அவர்களைச் சுற்றிலும் கர்த்தருடைய மகிமை பிரகாசித்தது. அதனால் அவர்கள் அனைவரும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி பயப்பட வேண்டாம் என்று கூறி, எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்காக வந்திருக்கிறேன் என்றும், இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்றும், அதற்கு என்ன அடையாளம் என்றால் அந்தப் பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தி இருப்பார்கள் என்றான். அப்பொழுது பரமசேனையின் திரள் கூட்டமானது, அந்தத் தூதனுடனே தோன்றி உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லித் தேவனைத் துதித்தனர். இந்த நற்செய்தி கிறிஸ் துவை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும், அனைத்து சமயத்தினருக்கும் கூறப்பட்ட நற்செய்தியாகும். இயேசு ஒரு மதத்தை ஸ்தாபிப்பதற்கு வரவில்லை. பாவத்தில் வாழ்கிறவர்களை மீட்டெடுக்கவே வந்தார். இதை மீகா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக இயேசு பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே,
மீகா 5 : 2ல் ”எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவி லுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.”
என்று உரைத்திருப்பதைப் பார்க்கிறோம். மேய்ப்பர்கள் தாவீதின் ஊராகிய பெத்லகேமை நோக்கிச் சென்று, மரியாளையும், யோசேப்பையும், முன்னணை யில் கிடத்தியிருக்கிற பிள்ளையையும் .தரிசித்தனர். பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என்று பொருள். பெத்லகேமின் மறுபெயர் எப்பிராத்தா. இந்தக் கிராமம் மிகவும் சிறிய தாழ்த்தப்பட்ட கிராமம். இங்குதான் இயேசு பிறந்தார். இயேசுவின் பிறப்பினால். இது சரித்திரப் புகழ் பெற்று விட்டது. இயேசு பிறந்த பின் முழு உலகமே பெத்லகேமை நோக்கிப் பார்த்தது. மேய்ப்பர்கள் இயேசுவைக் கண்டபின் அங்குள்ளவர்களிடம் அவர்களுக்குச் சொல்லப்பட்ட சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியைக் கூறினார்கள். அதைக் கேட்ட யாவரும் ஆச்சரியப் பட்டனர். மேய்ப்பர்கள் தங்களுக்குத் தூதன் சொல்லப்பட்டதைக் கேட்டு அதைக் கண்டு அதற்காகத் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள் (லூக்கா 2 :15,16). சாஸ்திரிகள் இயேசுவை வீட்டுக்குள் சென்று பணிந்தனர் (மத்தேயு2 : 11). இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் சந்திக்கவில்லை. ஆனால் இருவருடைய எண்ணமும், நோக்கமும் இயேசுவை சந்திக்க வேண்டும் என்பதுதான்.
சாஸ்திரிகள்: இயேசு இந்த உலகத்தில் பிறந்த போது அவரைத் தேடி மூன்று சாஸ்திரிகள் இயேசுவைப் பணிந்து கொள்ள வந்தனர். அவர்களுக்கு நட்சத்திரம் வழி காட்டியது. அந்த நட்சத்திரம் ஏரோதின் அரண்மனையைக் கடந்து சென்றபோது, சாஸ்திரிகள் அதைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு சுய புத்தியினாலும், மதியீனத்தாலும் யூதருடைய ராஜா என்றால் அரண்மனையில் தானே பிறப்பார் என்று நினைத்து உள்ளே சென்றனர். யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று எரோது ராஜாவிடம் கேட்டனர். இதைக் கேட்ட பொழுது ஏரோதும், அவனோடு கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவர்களுக்குப் புதியதாய் பிறந்த ராஜாவைப் பற்றி யாதொரு செய்தியும் தெரியவில்லை. பிறக்கும்போதே ராஜாவாக பிறந்தவர் யாரும் கிடையாது. ஆனால் இயேசுவோ பிறக்கும்போதே ராஜாவாகப் பிறந்தார். உடனே ஏரோது பிரதான ஆசாரியரையும், வேதபாரகரையும் அழைத்து வரச்சொல்லி அவர்க ளிடம் கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று விசாரித்தான். அதற்கு அவர்கள் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார் என்று கூறினர். மீகா தீர்க்கதரிசி 5 : 2 ல் ……கூறியிருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அப்பொழுது ஏரோது சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து பிள்ளையைக் கண்டபின் அதைத் தான் புணிந்து கொள்ளும்படி தனக்கு அறிவிக்கச் சொல்லி அவர்களைப் பெத்லகே முக்கு அனுப்பினான். பெத்தலகேம் கிராமத்தில் போய்ச்சேருகிற வரை அந்த நட்சத்திரம் அவர்களுக்கு வழிகாட்டியது. சாஸ்திரிகள் சந்தோஷப்பட்டு அந்த வீட்டுக்குள் பிரவேசித்துக் குழந்தையை சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து கொண்டார்கள்.
சாஸ்திரிகள் இயேசுவை தேடினார்கள், கண்டுபிடித்தார்கள், வணங்கினார்கள், கொடுத்தார்கள். இயேசுவின் பாதத்தில் தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து அவர்கள் கொண்டு வந்த பொன்னையும், துபவர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் வைத்தார்கள். பொன் கிறிஸ்துவின் ராஜரீகத்தையும், ஆளுகை யையும், தூபவர்க்கம் கிறிஸ்துவின் ஆசாரிய ஊழியத்தையும் தெய்வீகத்தையும், வெள்ளைப்போளம் கிறிஸ்துவின் பாடு மரணத்தையும் வெளிப்படுத்துகிறது. அவர்களின் இலட்சியம் அதோடு முடிவடைந்தது. அதன்பின் அவர்கள் சொப்ப னத்தில் தேவன் சாஸ்திரிகளிடம் திரும்ப ஏரோதிடம் போக வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு வேறு வழியாய் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள் (மத்தேயு 2 : 12). அதன் பின் அவர்களைப் பற்றி வேதத்தில் எதுவும் கூறப்பட வில்லை. சாஸ்திரிகள் செய்த மதியீனமான செயலினால், ஏரோது தனது வீரர்களை பெத்தலகேமிற்கு அனுப்பி இரண்டு வயதிற்குட்பட்ட ஆண் பிள்ளைகள் அனைத்தையும் கொன்று குவித்தான் (மத்தேயு 2 : 16). வேதத்தில் இன்னும் சில இடங்களில் நட்சத்திரங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் ஆபி ராகாமைக் கர்த்தர் ஆசீர்வதிக்கும் பொழுது ஆதியாகமம் 15 :5ல் வானத்து நட்சத்திரங்களைப் போல அவனுடைய சந்ததி இருக்கும் என்று ஆசீர்வதித்தார். தானியேல் 12 :3 ல் அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போல என்றென்றைக்கும் சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள் என்றார். கர்த்தருடைய வழிகளை விட்டு விலகி போனவர்களை யூதா 13 ல் மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறியிருப்பதையும் பார்க்கிறோம்.
தேவாலயத்தில் இயேசு:
இயேசு பிறந்த எட்டாவது நாள் இஸ்ரவேலில் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் பண்ணுவார்கள். அந்த நாளில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவார்கள். மரியாளும் யோசேப்பும் அதற்காக இயேசுவை எருசலேம் தேவாலயத்துக்கு ஒரு ஜோடி காட்டுப்புறாவுடன் கொண்டு சென்றனர். அவர்கள் ஏழைகளாக இருந்ததால் வெறும் புறாவை எடுத்துக் கொண்டு சென்றதைப் பார்க்கிறோம். அங்கு இரண்டு வயதானவர்கள் மட்டும் இயேசுவை மேசியா என்று அடையாளம் கண்டு கொண்டனர். அதில் ஒருவன் சிமியோன். இந்த சிமியோன் ஆவியின் ஏவுதலால் அங்கு வந்திருந்தான். கிறிஸ்துவைக் காணுமுன் மரணமடைய மாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சிமியோன் இயேசுவைக் கைகளில் ஏந்தி மூன்று தீர்க்கதரிசனங்களை உரைத்தார். 1. புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளியானவர் என்றும் 2. இஸ்ரவேல் ஜனங்களுக்கு மகிமையானவர் என்றும் 3. சகல ஜனங்களுக்கும் தேவனால் ஆயத்தம் பண்ணின இரட்சணியம் என்றும் லூக்கா 2 : 27– 32ல் கூறினார். வேதவாக்கியங்களை ஆராய்ந்து படியுங்கள். அப்பொழுது சிமியோனுக்கு காண்பித்தது போல காணக் கூடாதவைகளை இயேசு காணும்படி செய்வார். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்லாதவராக இருந்தாலும், கிரேக்க ஞானிகளுக்கு வெளிப்படுத்தியதைப் போல உங்களுக்கும் வெளிப்படுத்துவார். தன்னைத் தீவிரமாய்த் தேடுகிறவர்களுக்குத் தேவன் தன்னைக் காணச் செய்வார்.
இயேசுவைக் கண்ட நான்கு வித குழுவினர்:
பூமியில் பிறந்த இயேசு பாலனைக் காண வந்த நான்கு விதமான குழுவினருக்கு மட்டுமே தன் மகனின் பிறப்பைப் பற்றிக் கர்த்தர் முன்னறிவித்தார். அதில் சில ஏழை மேய்ப்பர்கள், பெர்சிய நாட்டைச் சேர்ந்த சில சாஸ்திரிகள், ஆவியில் நிறைந்த வயது முதிர்ந்த சிமியோன், இடைவிடாது ஜெபித்து வந்த வயது முதிர்ந்த அன்னாள். தேவன் தெரிந்து கொண்ட இந்த நான்கு வித குழுவினரில், மூன்று குழுவினர் இரவுநேரத்தில் பாடு படும் ஜனங்களாக இருந்தனர். மேய்ப்பர்கள் இரவு நேரத்தில் மந்தைகளை மேய்த்தனர். கிரேக்க சாஸ்திரிகள் இரவிலே நட்சத்திரத்தைப் பின்பற்றியே பயணம் செய்தனர். பகலில் நட்சத்திரம் தெரியாது. இராத்திரியில் உபவாசித்து ஜெபித்தவள் அன்னாள். இவர்கள் வெவ்வேறு விதமான ஜனங்கள். வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். வித்தியா சமான வயது உடையவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தாழ்மை நிறைந்து தெய்வ பயம் கொண்ட ஜனங்கள். இன்றும் இது போன்ற ஜனங்களையே தன்னுடைய இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறக் கர்த்தர் ஆயத்தப் படுத்துகிறார்.
இயேசு செய்யப்போவது முன்னறிவிக்கப்பட்டது:
பிலேயாம் எண்ணாகமம் 24 : 17ல் இஸ்ரவேலில் இருந்து எழும்பும் இயேசு வானவர் மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் புத்திரர் எல்லோரையும் நிர்மூலமாக்குவார் என்று கூறினார்..
ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 9 : 7ல் இயேசுவானவர் தாவீதின் சிங்காச னத்தையும், அவருடைய ராஜ்ஜியத்தையும் திடப் படுத்துவார் என்றும், அவர் அதை நியாயத்தினாலும், நீதியினாலும் நிலைப்படுத்துவார் என்றும் கூறினார்..
ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 11 : 4ல் இயேசுவானவர் நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரிப்பார் என்றும் யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமை யானவர்களுக்கு தீர்ப்பு செய்வார் என்றும், பூமியை தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார் என்றும் கூறினார்..
தூதன் மத்தேயு 1 : 21ல் இயேசுவானவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்..
தூதன் லூக்கா 1 : 33ல் இயேசுவானவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாள்வார் என்றும் அவருடைய ராஜ்யத்திற்கு முடிவு இராது என்றும் கூறினான்.
இந்தத் தீர்க்கதரிசனங்களனைத்தும் இயேசுவானவர் பிறப்பதற்கு முன்னமே என்ன செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.
இயேசுகிறிஸ்து வந்ததன் நோக்கம்:
வார்த்தையால் உண்டாக்க முடியாத ஒன்றை செய்து தீர்க்க வந்தார். தீர்க்க தரிசனங்களைக் கொண்டு செய்து வைக்க முடியாத ஒன்றை செய்ய வந்தார். வானத்திலிருந்து கட்டளையிட்டு நல்வழிப்படுத்தினாலும் அடைய முடியாத ஒரு இலட்சியத்தை அடைந்து மாபெரும் பாவமன்னிப்பைப் பரிசளிக்கும்படி வந்தார்.
வேதத்தில் இயேசுவானவர்:
ஆதியாகமத்தில் பெண்ணின் வித்தாக, யாத்திராகமத்தில் பஸ்கா ஆட்டுக் குட்டியாக, லேவியராகமத்தில் பாவப் பரிகாரப் பலியாக, எண்ணாகமத்தில் அடிக்கப்பட்ட கன்மலையாக, உபாகமத்தில் தீர்க்கதரிசியாக, யோசுவாவில் இரட்சிப்பின் அதிபதியாக, யோபுவில் மீட்பராக, நீதிமொழிகளில் ஞானமாக, தீர்க்கதரிசனங்களில் சமாதானப் பிரபுவாக, மத்தேயுவில் யூதருக்கு ராஜாவாக, மாற்குவில் யோகாவாவின் பணியாளராக, லூக்காவில் மணமகனாக, யோவானில் இறைமகனாக, அப்போஸ்தலரில் அறுவடையின் ஆண்டவராக, நிருபங்களில் திருச்சபையின் ஆண்டவராக, வெளிப்படுத்தலில் நாடுகளின் ஆண்டவராக இருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட தேவன் நம் நடுவிலும் யோவான் 1:14, நம்முடனும் மத்தேயு 1 : 23, நமக்குள்ளும் ரோமர் 8 : 9, 10, கொலோசெயர் 1 : 27, 28, நமக்காகவும் ரோமர் 8 : 31, 35 1 யோவான் 2 : 1 லும், நம் மீதும் அப்போஸ்தலர் 1 : 8, நமக்கப்பாலும் 1தீமோத்தேயு 6 : 16, ரோமர் 11 : 33, மத்தேயு 6 :1, 6, 18 நம்மை நோக்கியும் 1 தெசலோனிக்கேயர் 1 : 10 வெளிப் படுத்தல் 22 : 7, 12, 20 இருக்கிறார். இத்தனை பேர்பெற்ற இயேசு அழுக்கான மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். அவமானத்துக்குரிய சிலுவையில் மரித்தார். இயேசுவைப் போல் ஆணின் துணையில்லாமல் யாரும் பிறந்ததில்லை. இயேசுவைப்போல் பாவம் செய்யாமல் யாரும் இருந்ததில்லை. இயேசு போதித்ததைப் போல் யாரும் போதித்ததில்லை. இயேசு வரலாற்று இரண்டாகப் பிரித்தது போல் கிமு, கிபி என்று யாரும் பிரித்ததில்லை. இயேசு மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்ததைப் போல் யாரும் எழுந்ததில்லை. இன்றும் ஜீவிக்கிறார்.
இயேசு வகித்த பதவிகள்:
இயேசு ஒருவரே மூன்று பதவிகளையும் வகித்தவர்.
இயேசு ஒரு தீர்க்கதரிசி:
யோவான் 4 : 19 “அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.”
மத்தேயு 21 : 11 “அதற்கு ஜனங்கள்: கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.”
லூக்கா 4 : 24 “ ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக் கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (இயேசு தன்னுடைய வாயால் தன்னுடைய ஊரார் தன்னை அங்கீகரிக்காததால் மனமுடைந்து கூறிய வார்த்தை).
மேற்கூறப்பட்ட வசனங்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு தீர்க்கதரிசி என்று காட்டுகின்றன. அவர் பல தீர்க்கதரிசனங்களைக் கூறியுள்ளார் அதில் முக் கியமானது மத்தேயு 24 : 1 – 44, 25 : 31 – 46).
இயேசு ஆசாரியராக இருந்தார்:
எபிரேயர் 5 : 10 “மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.”
எபிரேயர் 7 : 17 “-நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.”
எபிரேயர் 8 : 2 “பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவ ருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.”
எபிரேயர் 9 : 11 “ கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, ….”
இயேசு ராஜா:
மத்தேயு 2 : 2 “ யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.”
மத்தேயு 25 : 34 “அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப்பார்த்து:…”
மத்தேயு 25 : 40 “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: ….”
மத்தேயு 27 : 37 “ …..இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.”
மாற்கு 15 : 2 “ பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.”
யோவான் 1 : 49 “அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.”
வெளிப்படுத்தல் 19 : 16 “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.”
பிதாவிடம் இருந்து இயேசு பெற்ற பாராட்டு:
இயேசுவின் ஊழியத்தின் தொடக்கத்தில்:
மத்தேயு 3 : 17 “ வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னு டைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”
இயேசுவின் ஊழியத்தில் நடுவில்:
யோவான் 12 : 28 “ பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.”
இயேசுவின் ஊழியத்தின் இறுதி பகுதியில்:
மத்தேயு 17 : 5 “ இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.”
இயேசு மனமுவந்து சிலுவை மரணத்திற்குத் தானே ஒப்புக்கொடுத்தார்:
அனைவருக்காகவும் மரித்த கிறிஸ்து:
இயேசு கிறிஸ்து ஒரு மதத்துக்காகவோ, கொள்கைக்காகவோ மரித்தவர் அல்ல. அவரது பலி, மரணம் முழு உலகத்தையும் மனதில் மேற்கொண்டது. இயேசு கிறிஸ்து முழு உலகத்திற்காகவும் மரித்தார். தாம் தெரிந்து கொள்ளப் பட்ட வர்களுக்காக மரித்தார். ஒவ்வொரு மனிதனுக்காகவும் மரித்தார் (எபிரேயர் 2 : 9).கிறிஸ்துவின்பலி மரணம் வழியாக அனைவருக்கும் மீட்பு ஏற்படுத்தப் பட்டா லும், விசுவாசித்து அதைச் சார்பவர்களுக்கு மட்டுமே அதன் ஆசீர்வாதங்களை சொந்தமாக்கி மீட்படைய முடியும் (2கொரிந்தியர் 5 : 18 – 20, யோவான் 17 : 9, எபேசியர் 5 : 25, 2 தீமோத்தேயு 1 : 9).
இயேசுவின் மரணத்தால் நமக்குக் கிடைத்தது:
இயேசு கிறிஸ்துவின் இக்கால செயல்:
வருங்காலத்தில் இயேசு கிறிஸ்து:
முடிவுரை:
வார்த்தையாக இருந்த கிறிஸ்து உலகத் தோற்றத்திற்கு முன்பே பிதா அவரிடம் சிலுவை மரணத்தைப் பற்றிக் கூறிய போது, தியாகத்துடன் மனமுவந்து தாமாகவே முன் வந்து ஏற்றுக் கொண்டார் (எபிரேயர் 10 : 8, 9). இவ்வுலகத்தில் இயேசு வாழ்ந்தபோது பரிசுத்தமாகவும், வல்லமையுடனும், மனதுருக்கத் துடனும், மிகுந்த அன்புடனும் அற்புதங்கள் செய்து, வியாதியஸ்தர்களைக் குணமாக்கி, பாவத்திலிருந்தும் பிசாசின் பிடியிலிருந்தும் மக்களை விடுவித்து வாழ்த்து காட்டினார். சவுக்கை எடுத்துக் கொண்டு தேவாலயத்தைச் சுத்தம் செய்த போதும் யாரையும் அடிக்கவில்லை. சிலுவையில் அடிக்கப்படுவதற்குத் தம்மை ஒப்புக்கொடுத்தார். மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்ட இயேசு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார் (மத்தேயு 28 ஆம் அதிகாரம், மாற்கு 16 ஆம் அதிகாரம், லூக்கா 24 ஆம் அதிகாரம், யோவான் 20, 21 அதிகாரங்கள்) பரலோகத்திற்கு ஏறிச் சென்ற கிறிஸ்து பெந்தேகோஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியை சீடர்கள் மேல் பொழிந்தருளினார் (அப்போஸ்தலர் 2 : 32, 33).
பிதாவானவர் அல்பாவும், ஒமேகாவும் இருப்பது போன்று குமாரனும் அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறார் (வெளிப்படுத்தல்1 :8, 11 -13). காணக் கூடாத நிலையில் தேவன் எங்கும் இருக்கிறார் (1இராஜாக்கள் 8 : 27, சங்கீதம் 139 : 7 – 12, மத்தேயு 18 : 20, ஏசாயா 60 : 1).தேவனுடைய சரீரம் எங்கும் இருக்கிறது என்பதில்லை. ஆனால் அவருடைய பிரசன்னத்தை எங்கும் உணர முடியும். தேவன் மட்டுமே எங்கும் இருக்கிறவர். மூன்றாம் வானம் என்று அழைக்கப்படும் பரலோகத்தில் (சங்கீதம் 19 : 1, 2 கொரிந்தியர் 12 : 23) அவரது சிங்காசனம் உள்ளது (ஏசாயா 66 : 1, வெளிப்படுத்தல் 4 : 2 – 4). தேவன் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைத்த பின்னர் புதிய எருசலேம் நகரம் வானத்திலிருந்து இறங்கி பூமிக்கு வரும். தேவனுடைய தலை நகரமாக அது பூமியிலிருந்து செயல்படும். அப்பொழுதிலிருந்து என்றென்றுமாக தேவனுடைய சிங்காசனம் பூமியில் இருக்கும் (வெளிப்படுத்தல் 21 : 3- 5, 22 : 1 – 5).
இப்பொழுதும் ஆத்மாவில் தாகமாயிருக்கிற எல்லோரையும் தேவன் அழைக்கிறார் (ஏசாயா 55 : 1 – 3), பாவிகளை அழைக்கிறார் (யோவான் 6 : 35, 7 : 37,38, வெளிப்படுத்தல்22 : 17), பாரஞ்சுமக்கிறவர்களை இயேசு அழைக்கிறார் (மத்தேயு 11 : 28 – 30), இடுக்கமான வாசல் வழியாக நித்திய ஜீவனை அடைய இயேசு அழைக்கிறார் (மத்தேயு7 : 12 – 14). கர்த்தரிடத்தில் ஒவ்வொருவரும் நெருங்க ஆசைப்படுவோம். இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுவோம் (ரோமர் 15 : 3). அவர் நமக்குக் கூறிவிட்டுச் சென்ற திருவிருந்தில் பங்கெடுக்கும் போது, அவருடைய அப்பத்தைப் புசித்து, பாத்திரத்தில் பானம் பண்ணும் போது இயேசுவின் பாடுகளையும், மரணத்தையும், அவர் மறுபடியும் வருவார் என்பதையும் நினைவு கூறுவோம் (லூக்கா 22 : 19, 1 கொரிந்தியர் 11 : 24, 25). கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர் என்பதை நினைவு கூறுவோம் 2 தீமோத்தேயு2 : 8). தேவனுடைய அற்புதங்களையும், அதிசயங்களையும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவு கூறுவோம் (சங்கீதம் 105 : 6). ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…