பஸ்கா பண்டிகை கொண்டாட யோசேப்பும், குடும்பமும் எருசலேமுக்குச் சென்றனர். பண்டிகை முடிந்ததும் யோசேப்பும், மரியாளும் ஊர் திரும்பினர். ஆனால் இயேசுவைக் காணாததால் இருவரும் திரும்ப எருசலேமுக்கு வந்து மூன்று நாட்கள் கழித்து ஆலயத்தில் போதகர் நடுவில் இயேசு அமர்ந்து அவர்கள் பேசுகிறதைக் கேட்பதும், அவர்களிடம் வினாக்கள் எழுப்புகிறதையும் கண்டார்கள். இயேசு பேசுவதைக் கேட்ட யாவரும் அவருடைய புத்தியைப் பார்த்து பிரமித்தனர். யோசேப்பும், மரியாளும் அங்கு நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். மரியாள் இயேசுவைப் பார்த்து,

  • “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.“ அதற்கு இயேசு
  • “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா என்றார்.”

இயேசு சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு இயேசு அவர்களுடன் நாசரேத்துக்குச் சென்று பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். இயேசு ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர்தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் – லூக் 2:41- 52

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

8 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

8 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

8 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

8 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

8 months ago