ஒரு மனிதனுடைய கண்கள் அவனுக்கு விளக்காக, வெளிச்சத்தைத் தரும் கருவியாக இயேசு குறிப்பிடுகிறார். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது என்பது, கண்கள் நம்முடைய மனது அல்லது காரியங்களை விளங்கிக் கொள்ளும் திறனுக்கு உருவமாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய மனது சீராக செயல்பட வேண்டும் என்பதை “உன் கண் தெளிவாயிருந்தால்” என்று இயேசு குறிப்பிடுகிறார். பொருளாசை என்ற தீமையினிமித்தம் நம் மனது பாதிப்படைகிறது. இருளடைகிறது. அப்படியில்லாமல் நம் கண் தெளிவாயிருக்கும் போது நம் மனது வழியாக சரீரத்துக்குள் உட்பிரவேசிக்கும் காரியங்களினால் சரீரம் வெளிச்சமடைகிறது, ஆசீர்வதிக்கப்படுகிறது.
உன் கண் கெட்டதாயிருந்தால் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும் என்றும் இயேசு உபதேசித்தார். கண்ணில் ஒளியில்லாதவர்கள் இருளைத்தவிர வேறு எதையும் காணாததைப் போன்று, ஒருவனுடைய ஆத்துமா இருளடைந்திருந்தால் அவனது இவ்வுலக வாழ்க்கையும், ஆவிக்குரிய வாழ்க்கையும் மிகவும் இருளடைந்ததாகும். “தெளிவாயிருக்கும் கண்” என்பது ஆவிக்குரிய காரியங்களில் நோக்கமாயிருக்க வேண்டும் என்பதாகும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…