எரேமியா 23 : 5, 6 “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.”
“அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.”
இது கிறிஸ்துவைக் குறித்து எரேமியா கூறிய தீர்க்கதரிசனமாகும். இதில் கர்த்தர் என்பதின் மூலச்சொல் யேகோவா என்பதாகும். எனவே கிறிஸ்துவை யோகோவா என்று கூறுகிறது. தாவீதின் குடும்பத்தாரை கி.மு 586 ல் தேவன் அழித்த போது, தாவீதின் ராஜவம்சம் வெட்டப்பட்டுப் போய்விட்டது. இருப்பினும் தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு கிளையை எழுப்புவதாகத் தேவன் வாக்களித்தார். இந்த ராஜா இறுதியாக நீதியையும் நேர்மையையும் செய்வார். அவருடைய 1000 வருட அரசாட்சியின் முன் நடக்கும் அவரது இரண்டாம் வருகைக்குப் பின் தான் அவரது முழு நியாயத்தீர்ப்பின் அரசாட்சி விளங்கும். அப்பொழுது இயேசுவை “நமது நீதியாயிருக்கிற கர்த்தர்” என்று அழைப்பார்கள். அப்பொழுது யூதா இரட்சிக்கப்படும். இஸ்ரவேலர் சுகமாய் வாசம் பண்ணுவார்கள்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…