1. லூக்கா 1 : 31 ”இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.”
  2. லூக்கா 1 : 35 “தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்திரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”

காபிரியேல் தூதன் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரில் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த மரியாள் என்ற பெண்ணிடம் வந்து, அவளை வாழ்த்தி அவள் கிருபை பெற்றவள் என்று கூறினான். மேலும் கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்றும், ஸ்திரீகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும் கூறினான். அந்த வாழ்த்துதலைப் பார்த்து மரியாள் கலங்கினாள். அப்பொழுது தூதன் பயப்பட வேண்டாம் என்று கூறி, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அந்தக் குழந்தைக்கு இயேசு என்று பெயரிடு என்றும் கூறினான். அதற்கு மரியாள் தூதனை நோக்கி, இது எப்படி நடக்கும், தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், புருஷனோடு சேரவில்லை என்றும் கூறினாள். அதற்கு தேவதூதன் பரிசுத்த ஆவியானவர் உன்மேல் நிழலிடுவார், அந்த ஆவியானவருடைய பலத்தினால் பரிசுத்தமுள்ள தேவனுடைய குமாரன் பிறப்பார் என்று கூறினான். மரியாள் தூதனிடம், நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்றாள். உடனே தூதன் அவ்விடத்திலிருந்து போய்விட்டான். மரியாள் கர்ப்பம் ஆனாள். ஒரு பெண் கர்ப்பமாகி விட்டால் அது அவளுக்கு மிகுந்த பெருமிதத்தையும் சந்தோஷத்தையும் உண்டாக்கும். ஆனால் மரியாள் கர்ப்பம் தரித்தது ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது. அதற்கு முன் யாருக்கும் அப்படி நடந்ததாகவும் நடக்கும் என்று கேள்விப் பட்டதே இல்லை.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

1 month ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago